திருப்பூர், டிச.5- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப் பூர் தெற்கு மாநகர தேர்தல் திங்களன்று வெள்ளியங்காடு பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக காங்கேயம் வட்டாரச் செயலா ளர் வெங்கடேஸ்வரன், துணை ஆணையாளராக திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் மோகன் ஆகியோர் சேர்ந்து தேர்தலை நடத்தினர். திருப்பூர் தெற்கு மாநகரத் தலைவராக சங்கர், செயலாளர் கனகராஜா, பொருளாளராக பிரேமா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தினேஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.