districts

img

சிறந்த அரசுப்பள்ளிக்கான விருது வழங்கல்

பொள்ளாச்சி, நவ.29- பொள்ளாச்சி, செம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள் ளிகளுக்காக ஏற்படுத்தபட்டுள்ள உள்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து வரு கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அளவில் கோவை  மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத் திற்குட்பட்ட செம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு  செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழா வில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தலைமை ஆசிரியை எம்.பி. பெரியநாயகியிடம் விருதினை வழங்கி னார். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்  கூறுகையில், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள், பேரூராட்சித் தலைவர் மற்றும் ஊர் பொதுமக் கள் அனைவரும் பள்ளியின் வளர்ச்சிக்காக தங்களின் பெரும் பங்களிப்பை அளித்துள்ள னர். இதன்விளைவாகவே இந்த விருதினை பெற்றுள்ளோம், என்றார்.