districts

img

பாலர் பூங்கா அறிவியல் நிகழ்ச்சி

திருப்பூர், செப். 30 – சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி மாவீரன் பகத்சிங்கின் 115 ஆவது தினத்தன்று பாலர் பூங்கா அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கேரிபாளையம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்  வி.ராமமூர்த்தி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மந்திரமா,  தந்திரமா நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். இங்கு மாலை  நேர இலவச பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட்டது. இதில் ஏராள மான குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள  மாலை நேர வகுப்பை வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அருள் தொடக்கி வைத்தார்.

;