districts

img

மின்சார கட்டண உயர்வை திரும்பப்பெறுக விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.13- மின்சார கட்டண உயர்வை திரும் பப்பெற வலியுறுத்தி குமாரபாளையம் நகர மின்வாரிய அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார் பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண  உயர்வை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதந்தோறும் கணக்கெடுத்து வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். விசைத்தறி உள்ளிட்ட சிறு,குறு தொழில்களை பாதுகாக்க மின்சார. திருத்த வரைவு மசோதா 2022-ஐ திரும்பப்பெற உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையம் நகர மின்வாரிய அலு வலகம் முன்பு விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் நகர தலைவர் ஜே.எஸ். சரவ ணன் தலைமை வகித்தார். இதில், நகர செயலாளர் கே.பாலு சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. சண்முகம், நகரக்குழு உறுப்பினர் பி. என்.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சி யின் நகர செயலாளர் என்.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைய டுத்து, விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் குமாரபாளையம் நகர மின்வா ரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

;