உதகை,ஏப் 5- நீலகிரியில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான தபால் வாக்குப்பதிவு வெள்ளியன்று முதல் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி யன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்கா ளர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்கும் விதமாக, தபால் வாக்கு அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் தது. இந்த தபால் வாக்கு வாக்காளர்களின் விருப்பத்தின்பே ரில் மட்டுமே வழங்கப்படும். கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூத்த வாக்காளர்கள், மாற்றுத்தி றனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு விருப்பும் தெரிவிப்பதற்கான 12டி படிவம் வாக்குச் சாவடி அலு வலர்களால் வழங்கப்பட்டது. இதில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தமிழக முழுவதும் வெள்ளியன்று தபால் வாக்கு பதிவு துவங்கியது.உதகை யில் தலைக்குந்தா பகுதியில் தபால் வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேரில் சென்று ஆய்வு செய்தார். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதா வது, நீலகிரியில் தபால் வாக்கு பதிவுக்கு தகுதியாக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3056 பேரும், மாற்றுத்திறனா ளிகள் 4050 பேரும் உள்ளனர். இதில் தபால் வாக்கு போடுவதற்கு வயதானவர்கள் 796 பேரும், மாற்றுத்திறனாளி கள் 981 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் வெள்ளியன்று முதல் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். இப்பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும். மேலும் தபால் வாக்கு செலுத்தும் போது தேவையில்லாத அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்ப டாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குப் பதிவு நடைமுறையில் வாக்குப் பதிவு அலு வலர்கள், விடியோ குழுவினர் வாக்காளர்களின் வீடுக ளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொள்வர். இந்த வாக்குப் பதிவு விடியோ பதிவு செய்யப்படும். இதில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் பங்கேற்கலாம், என்றார். உடுமலை திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வய துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளை, பதிவு செய்ய, வரு வாய்த்துறை அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று தாபல் வாக்குகளை பெற்றனர்.