திருப்பூர், ஜன.16- மக்கள் ஒற்றுமையை காக்கும் வகையில் பொங்கல் விழா திருப்பூர், அவிநாசி, உடு மலை ஆகிய பகுதிகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாப்பட்டது. உடுமலை: உடுமலை பள்ளபாளையம், குரல் குட்டை, ஜல்லிபட்டி மற்றும் சிவசக்திகா லனி பகுதியில் போட்டிகள் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து மக்களும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். இதில், போதைக்கு எதிரான உறுதி மொழி எடுக்கப்பட்டு விழா தொடங்கியது, இவ்வி ழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் போட்டிகள் நடை பெற்றது. மேலும், பரிசு வழங்கும் விழாவில் மூடநம்பிக்கையால் மக்கள் படும் துன்பங்க ளுக்கு அவர்களின் அறியாமைதான் காரணம் என்பதை விளக்கும் வகையில், மந்திரமா தந் திரமா என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும், குழந் தைகளுக்கு சிறப்பு போட்டியாக திருக்கு றள் ஒப்புவித்தல், கதை சொல்ல வாங்க என் பது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. சாதி மற்றும் மதங்களின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியல் நடத்தும் மத வாதிகளுக்கு மத்தியில் மக்கள் ஒற்றுமையை காக்கும் வகையில் பொங்கல் விழாவை வாலிபர் சங்கத்தினர் கொண்டாடினார். முன்னதாக, வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங்காரவேலன், மாவட்டச் செய லாளர் மணிகண்டன், உடுமலை நிர்வாகிகள் தமிழ்தென்றல், குமரகுரு முன்னாள் நிர்வாகி கள் விஸ்வநாதன், தண்டபாணி, தோழன் ராஜா, ரங்கராஜ், கனகராஜ், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பஞ்சலிங்கம், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டார்கள்.
பெருமாநல்லூர்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப் பூர் வடக்கு சார்பில் பெருமாநல்லூர் பகுதி யில் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் தேவ ராஜ் தலைமையில், பொதுமக்கள் பங்கேற்பு டன் ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில், வடக்கு ஒன்றியத் தலைவர் ரேவந்த், செயலாளர் சந்தோஷ் உட்பட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். அவிநாசி: அவிநாசியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பாலர் பூங்கா சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன் றியத் தலைமை அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றியத் தலைவர் சித்ரா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாலர் பூங்கா மாவட்டச் செயலாளர் சந்துரு, அவிநாசி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கிளை ஒருங்கிணைப்பாளர் நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல அவினாசி பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்ட சமத்துவ பொங் கல் விழாவில் பேரூராட்சித் தலைவர் தனலட் சுமி பொன்னுசாமி, வழக்கறிஞர் கோபாலகி ருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவினாசி காவலர் குடியிருப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநா தன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஜான்சன், அவிநாசி காவல் கண்காணிப்பா ளர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் தலைமை யில் பொங்கல் வைக்கப்பட்டு, விளை யாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. வேலம்பாளையம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில், அணைப்பாளையம், வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர் பகுதிகளில் சமத் துவப் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு ஒன்றியம்:
திருப்பூர் தெற்கு ஒன்றியம் முதலிபாளை யம் சிட்கோ பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தி னர். செவ்வாயன்று நடத்தப்பட்ட இந்த விழா வில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்தவர் களும் பொங்கல் வைத்து கொண்டாடினர்.