districts

img

மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக மலரும் பொங்கல் திருவிழாவுக்கு தயாராகிறது திருப்பூர்

திருப்பூர், ஜன. 6 - தமிழர் திருநாளான பொங்கல் திருவி ழாவை மக்கள் பங்கேற்புடன் ஒரு பண் பாட்டுத் திருவிழாவாக கொண்டாடுவதற்கு திருப்பூர் மாநகரம் தயாராகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண் பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல்  சங்கம் இணைந்து திருப்பூரில் பொங்கல் திரு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளன.  ஜனவரி 15ஆம் தேதி முதல் மூன்று நாட்க ளுக்கு திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே நொய்யல் நதிக்கரை மைதானத்தில்  இந்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தலைமை ஏற்க அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் விழா பேருரை ஆற்ற உள்ளனர். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், புலம்பெயர் தமிழர்  நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசே னாபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொங்கல் திருநாளான தை முதல் நாள்  ஞாயிற்றுக்கிழமை மாலை சமத்துவப் பொங் கல் வைக்கப்படுகிறது. அனைத்து மதத்தி னரும் பங்கேற்க, 25 பேர் சமூக நல்லிணக்கப்  பொங்கல் வைக்க உள்ளனர். இதைத்  தொடர்ந்து அழகு வள்ளி குழுவினரின் வள்ளி  கும்மி, ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், திண் டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பெண் கள் தப்பாட்டம், களரி - சிலம்பாட்டம், திரு வண்ணாமலை பெரியமேளம்  ஆகியவை பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க  உள்ளன.   தை 2 ஆம் நாளான திங்களன்று  மாலை கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம்,  தேவராட்டம், கர்நாடகா மலையக மக்களின் கலையான டொல்லு குனிதா, நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இரண்டு நாட்களும் திருப்பூர் மண்ணிசைக் கலைஞர் களின் பாடல்களும் இதில் இடம் பெற உள் ளன. மூன்றாம் நாளான செவ்வாயன்று மூன் றாயிரம் பேர் பொங்கல் வைக்கும் மாபெரும்  நிகழ்வும் அரங்கேற உள்ளது.

பின்னலாடை தொழில் வளர்ச்சி பெற்ற  சூழலில் திருப்பூர் உழைக்கும் மக்கள் பெரும் பாலும் பொங்கல் பண்டிகை சமயத்தில் தங் கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து விடுவர். திருப்பூரே வெறிச்சோடிக் காணப் படும். எனினும் நொய்யல் நதிக்கரையில் அமைந்திருக்கும் திருப்பூர் பாரம்பரிய பண் பாட்டு விழாக்களை சிறப்புடன் கொண்டா டிய மரபைக் கொண்டதாகும். அந்த சிறந்த மக்கள் பண்பாட்டை மீட்டெ டுத்து உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் ஆடிப் பாடி கொண்டாட்டமாகத் திகழ்வ தற்கு இந்த ஆண்டு பொங்கல் விழா முன் னெடுப்பு செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநக ராட்சியின் சார்பில் பொங்கல் வைக்கும் இடம்  கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம் ஆகியவை  சுத்தம் செய்யும் பணி துரித கதியில் நடை பெற்று வருகின்றன. கலை குழுக்களும் இந்த  விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தங்கள் பாரம்பரிய கலைச்  சிறப்புகளை வெளிப்படுத்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அத்துடன் இந்த விழா குறித்த விளம்ப ரங்களும் பரவலாக மக்கள் மத்தியில் சென்று  சேர்வதற்கு சமூக ஊடகங்களிலும் விரிவாக  பரப்பப்பட்டு  வருகின்றன. உழைப்புக்குப் பெயர் பெற்ற திருப்பூரில் மக்களின் பண் பாட்டுத் திருவிழாவாக வெகு சிறப்பாக அரங் கேற விழா குழுவினர் சுறுசுறுப்புடன் பணி யாற்றி வருகின்றனர்.