districts

பொள்ளாச்சி- திருச்செந்தூர் ரயில் மீண்டும் இயக்கம்

பொள்ளாச்சி, டிச.12- கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பொள்ளாச்சி- திருச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் டிச.15 ஆம் தேதி  முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடையும்.  பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.  இந்த ரயில்கள் கோமங்கலம், உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக் கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து, நெல்லை, பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இரண்டு ஆண்டுக்குப் பிறகு இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;