districts

img

பொள்ளாச்சி: ஆழியார் அணை பூங்கா புல்வெளியில் தீ விபத்து

பொள்ளாச்சி, மார்ச் 6- பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணை பூங்கா புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா மற்றும் கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தின;e தோறும் வந்து செல்கின்றனர். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பொழிவு இல்லாத காரணத்தினால் ஆழி யார் அணை பூங்கா பகுதியில் உள்ள புல்வெளிகள் காய்ந்து  காணப்படுகிறது. இந்நிலையில், சனியன்று அணை சரிவில் உள்ள புல்வெளியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், அணை பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தீ விபத்து ஏற்படும் வகையில், பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.