districts

14 வயது பள்ளி சிறுமிக்கு கட்டாய திருமணம்

தருமபுரி, பிப்.7- பாலக்கோடு அருகே 14 வயது சிறு மிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் கூலி தொழி லாளியின் 14 வயது மகள், அதே பகுதி யில் 9 ஆம் வகுப்பு படித்து கொண்டி ருந்தார். இந்நிலையில், கடந்த ஜன.17 ஆம் தேதி இந்த மாணவிக்கும், பாப் பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் தொட்டம்பட்டி பெரு மாள் கோயிலில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதுகுறித்து மாணவி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவ லக ஊர் நல அலுவலர் சசிகலாவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஊர் நல அலுவலர் சசிகலா உடனடி யாக மாணவியை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், தன்னை கட்டாயப் படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாகவும், தான் படிக்க வேண் டும் என்றும் கூறியுள்ளார். இதைய டுத்து மாணவியின் தாய், திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது சசிகலா பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் வீரம்மாள், உதவி ஆய்வா ளர் விஜயா ஆகியோர் மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.