districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

78 போலீசார் பணியிட மாற்றம்

78 போலீசார் பணியிட மாற்றம் கோவை, ஜூலை 1- ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வந்த 78 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் 20 காவல் நிலை யங்கள், 4 மகளிர் காவல் நிலையங்கள், இரண்டு போக்கு வரத்து புலனாய்வு காவல் நிலையங்கள் இயங்கி வருகின் றன. இதில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.  இந்நிலையில், கோவை மாநகரில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரியும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உட்பட 78 பேர் மாநகரக்குள் உள்ள காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் 39 பேர் உதவி ஆய்வாளர்கள், 20 பேர் பெண்கள் ஆவார்கள்.

ஒரு தலைபட்சமாக போலீசார் பஞ்சாயத்து

சேலம், ஜுலை 1- நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக போலீ சார் பஞ்சாயத்து செய்வதாக குற்றம் சாட்டி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தும்பிப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனது தாத்தாவிற்கு சொந்தமான 77 சென்ட் நிலத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் என்பவ ருக்கு விற்பனை செய்துள்ளார். இதுதொ டர்பாக, 2023 ஆம் ஆண்டு நிலம் சம்பந்த மாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை உள்ளது. இந்நி லையில், கடந்த 28ஆம் தேதி தீவட்டிப் பட்டி காவல் நிலையத்தில் தன்னை அழைத்தனர். பின்னர், விசாரணை செய்து, ஒருதலை பட்சமாக காவல்து றையினர் செயல்பட்டனர். நீதிமன்றத் தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், விற்பனை செய்த நிலத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட பால கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து சேலம் டவுன் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, சேலம் இளம் பிள்ளை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, கடந்த ஐந்தாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பல இடங்களில் மனு அளித் தும், இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, விஷம் அருந்தி ஆட்சியர் காரின் முன்பாக திடீரென மயங்கி விழுந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

காய்கறி விலைகள் இரு மடங்கு உயர்வு

காய்கறி விலைகள் இரு மடங்கு உயர்வு உதகை, ஜூலை 1- நீலகிரி மாவட்டத்தில், கன மழை எதிரொலியாக அனைத்து வகையான காய்கறிகளின் விலைகளும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்த படியாக, 20 ஆயிரம் ஏக்கரில் கேரட், பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. இதனைத்தவிர, இங்கிலீஸ் காய்கறிகளும் பயிரி டப்படுகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகள் மணம், ருசி இருப்பதால் உதகை மார்க்கெட், மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு விற்ப னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், மலைக் காய்கறிகள் தோட்டங்களிலிருந்து நேரடியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநி லங்களுக்கு மொத்த வியாபாரிகள் நேரடியாகவும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் கோடை மழை ஜன., முதல் ஏப்., மாதம் வரை சராசரி அளவு, 40 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், தாமதமாக மே முதல் வாரத்தில் சில நாட்கள் பெய்தது.  கோடை மழை, 25 செ.மீ., பெய்தது. ஜூன் மாதத்தில் துவங்கும் தென் மேற்கு பருவமழை தாம தமாக துவங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. மழையை எதிர்பார்த்து விவசாயம் மேற் கொள்ளும் விவசாயிகள் மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் குறைந்தளவில் சாகுபடி செய்தனர். உதகை மார்க்கெட்டுக்கு சராசரியாக தினமும், 40 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு விவசாயி கள் கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்க ளாக, 20 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு களால்  பிற மாவட்டத்திலிருந்து உதகை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்  காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. வெள்ளை பூண்டு ரூ. 500 ரூபாய், முருங்கைகாய் ரூ. 240, உருளை கிழங்கு ரூ. 130, சின்ன வெங்காயம் ரூ. 100, தக்காளி ரூ. 90, உள்ளிட்ட அன்றாட உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலை, பீர்க்கங்காய், பாகற்காய், அரை கீரை, சிறு கீரை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளுக்கு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காய்கறி விலை உயர்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இந்த விலை உயர்வு என்று புரியவில்லை. மேலும், பொதுமக்கள் பயன் பெறும் வகை யில் தோட்டக்கலை துறை மூலம் அந்தந்த பகுதிகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனை செய்ய மாவட்ட நிர்வா கம் பரிந்துரைக்க வேண்டும். என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விஷ சாராய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

விஷ சாராய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் அவிநாசி, ஜூலை 1- அவிநாசி அருகே சிபிஎம் சௌடாம்பிகை நகர் கிளை சார்பில் விஷச் சாராய குற்றவாளிகள் அனைவரையும் கைது  செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரண மான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சௌடாம்பிகை நகர் கிளை சார்பில் தெக்கலூர் பிரிவில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராமகி ருஷ்ணன் தலைமையேற்று நடத்தினார். இதில் ஒன்றிய கவுன் சிலர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய  குழு உறுப்பினர் வேலுச்சாமி, மோகனசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் குமரவேல், பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர்  கதிர்வேல், துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த பணிகளில் ரூ.200 கோடி முறைகேடு! அதிமுக ஊராட்சி ஒன்றியக்  குழு தலைவர் மீது புகார்

சேலம், ஜூலை 1- தலைவர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி ஒப்பந்த  பணிகளில் ரூ.200 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக  கொங்கணாபுரம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு  தலைவர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி கந்தனேரி பகுதியை சேர்ந்த  வடிவேலு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர் முகாமில் பங்கேற்று மனு அளித் தார்.  இது குறித்து அவர் செய்தியாளிடம் கூறுகையில், எடப் பாடியில் உள்ள கட்சிப்பள்ளி பகுதியில், சுடுகாட்டிற்கு பரா மரிப்பு பணி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஒப்பந்தம்  போடப்பட்டு பணிகள் செய்யாமல் இருந்தது. இது குறித்து கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார  வளர்ச்சி அலுவலர் பழனிசாமி என்பவரிடம் கேட்டேன். அவர்  முறையாக பதில் தராமல் தட்டிக் கழித்தார். இது குறித்து தக வல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு வாங்கிய போது அதிர்ச்சியுற்றேன். இதில், அதிமுகவை சேர்ந்த கொங் கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணியும், வட்டார  வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் இருவரும் சேர்ந்து  முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் உள் ளிட்ட அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் எடுத்துள்ள னர். இவைகள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணியின்  மகன் ராஜா மற்றும் செந்தில் ஆகியோர் பெயரில் ஒப்பந்தம்  பெறப்பட்டு, ஒப்பந்த பணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.200 கோடி ரூபாய் மேல் முறைகேடு செய்து சொத்துக்களை சேர்த்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு சரிவர பதில் தராமல் கொங்கணா புரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணி எங்கு வேண்டு மானாலும் புகார் தெரிவிக்கலாம் ஒன்றும் செய்ய முடியாது  என்கிறார்.  இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார்  தெரிவித்திருந்தேன். ஆனால், காவல்துறையினர் இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி  முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த கொங்கணா புரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணி மற்றும் வட்டார  வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரி வித்தார்.

இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வருக்கு விருது

இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வருக்கு விருது கோவை, ஜூலை 1- தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறந்த மருத்துவ தற்கான விருதிற்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல் வர் ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சர்வதேச மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழக சுகாதா ரத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர் கள், சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுவழங்கப் பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கோவை மாவட்டம், இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் சிறந்த மருத்துவருக்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவக் கல்லூரி தொடங்கி 150 மருத்துவ இடங்கள் பெற காரணமாக இருந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வராக பணியாற்றியபோது, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்தார். நாட்டிலே கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மட்டும் தான் பிரேதப் பரிசோதனை கூடம் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட காரணங்களுக்காக இந்த விருது வழக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல் உதகை, ஜூலை 1- கனமழையால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் நேரில் சென்று  நிவாரண உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட  பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகி றது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பொன்னாணி அரசு பழங்குடியி னர் உண்டு, உறைவிடப் பள்ளி முகாமில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர், அம்பலமூலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முகாமில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் என  மொத்தம் 41 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்முகாமில், தங்கி உள்ளாவர்களை ஞாயிறன்று சுற்று லாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்பு, அவர்க ளுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கி னார். இதைத்தொடர்ந்து, அத்திமா நகர் பகுதியில் மண் சரிவு  ஏற்பட்ட பகுதியை அமைச்சர் பார்வையிட்டார். இதில்,  நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா, கூடுதல் ஆட்சியர்  கௌசிக், கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், நெல்லியா ளம் நகராட்சி ஆணையர் முனியப்பன், நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் சிவகாமி, முன்னாள் கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி, கூடலூர் வட்டார வளர்ச்சி  அலுவலர் சலீம் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் அலுவலர்க ளும் கலந்து கொண்டனர்.