அதிமுக நிர்வாகி மீது போலீசில் புகார்
அதிமுக நிர்வாகி மீது போலீசில் புகார் சேலம், மார்ச் 19- கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக நிர்வாகி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மணியனூர் அருகே உள்ள பாரதிநக ரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட், கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்து வருகிறேன். கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முன் னாள் மாநகராட்சி மண்டலக்குழு தலைவரும், அதிமுக எம்ஜி ஆர் மன்ற மாநில துணைச்செயலாளருமான மோகன், அவரது மனைவி சாந்தி, எனது மனைவி பரிமளா ஆகியோர் சேர்ந்து கன்ஸ்ட்ரக்சன் தொழிலை செய்து வந்தோம். இந்நிலையில் சாந்தி, கம்பெனியின் பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். இதுதொடர்பான வழக்கில் எனக்கு சாதக மாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து சாந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இதனிடையே, நாங்கள் ஒன்றாக தொழில் செய்த போது, நெத்திமேடு பகுதியில் 1,837 சதுரஅடி நிலத்தை கூட்டு கிரயமாக வாங்கினோம். அந்த சொத்தில் எனக்கும் பங்கு உள்ளது. ஆனால் மோகன், அவர் மட் டுமே நிலத்திற்கு உரிமையாளர் எனக்கூறி அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். மேலும், அங்கிருந்த மரங்களை கட்டி டம் கட்டுவதற்காக வெட்டியுள்ளார். நான் சென்று கேட்ட போது அவரது ஆட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கி றார். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கீரியை வேட்டையாடியதாக 2 பேர் கைது
கீரியை வேட்டையாடியதாக 2 பேர் கைது கோவை,மார்ச் 19- நரிக்குறவர் காலனியை சேர்ந்த இருவர் கீரியை வேட்டை யாடியதாக வனத்துறை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரியை பிடித்து வாருங்கள் பணம் தருகிறோம் என திட்டமிட்டே ஆசை காட்டி சிக்கவைத் துள்ளதாக நரிக்குறவர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து, பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி கொள்ளு பாளையம் பகுதி, எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலணியை சேர்ந்த அப்பகுதியினர் கூறுகையில், எங்கள் நரிக்குற சமூக மக்கள் வேட்டை தொழிலுக்கு தற்போது செல்வதில்லை. மளிகை மற்றும் பேன்சி உள்ளிட்ட பொருட்கள் வியாபா ரம் செய்துதான் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இரண்டு நபர்கள் எங்கள் பகுதிக்கு, எங்கள் சமூகத்தை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சிவம் உள்ளிட்டவர்களிடம் கீரிபிடித்து தர சொல்லி கூறியுள்ளனர். தற்போது வேட்டை தொழிலை செய்வதில்லை இவர்களும் தெரிவித்துள்ள னர். ஆனால், வந்தவர்கள் எங்கள் குழந்தைக்கான மருத்துவ தேவைகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது, மூவாயிரம் பணமும் தருவதாக ஆசை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தையின் மருத்துவ தேவை என்பதாலும், பணம் கிடைக்கும் என்பதால் கீரியை பிடித்து தர ஒத்துக் கொண்டுள்ளனர். பின்னர், கீரியை கேட்டு வந்த இருவர் அவரு டைய மொபைல் எண்ணை கொடுத்து விட்டு பிடித்தவுடன் தகவல் கூறுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். நரிக்கு றவர் காலனி இளைஞர்களும் கீரியை பிடித்தவுடன் குறிப் பிட்ட மொபைல் எண்ணிற்கு தகவல் கூறி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களிடம் கீரியை உயிருடன் ஒப்ப டைக்கும் போது தாங்கள் வனத்துறை சேர்ந்தவர்கள் எனக் கூறி இளைஞர்கள் இதுவரையும் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வேட்டை தொழிலை கைவிட்ட பிறகும் திட்டமிட்டு வேண்டும் என்றே எங்கள் சமூக இளைஞர்களை சிக்க வைத்து சிறையில் அடைத் துள்ளனர் என வேதனை தெரிவித்தனர். முன்னதாக, நரிக்குறவர் சமூக இளைஞர்களை திட்ட மிட்டு பிடித்து சென்றது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சி யரிடம் அப்பகுதி மக்கள் திரளானோர் வந்து முறையிட்ட னர்.
தக்காளி அறுவடை பணி தீவிரம்
கோவை,மார்ச் 19- வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தக் காளி விரைந்து பழுத்த நிலையடைவதால் அதனை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரப் படுத்தியுள்ளனர். கோவை மாட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் தக்காளி சாகுபடியில் விவ சாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் ஜூலை மாதம் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து தக்காளி பயி ரிட்டனர். நன்கு விளைச்சல் அடைந்த தக்காளிகள் நவம் பர் மாதம் அறுவடை தீவிரமானது. இதனால் சந்தைக்கு, தக்காளி வரத்து அதிகரித்து, விலை சரிய துவங்கியது. மேலும் கடந்த பல வாரமாக 1 கிலோ தக்காளி ரூபாய். 8 முதல் ரூ. 10 வரை மட்டுமே விற்பனையானது. இதன்பின் சில வாரத்தில் மீண்டும் தக்காளி வரத்து குறைந்து, 1 கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலை அதிகரித்தது. இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 3 மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் தக்காளி விரைந்து பழுத்த நிலையடைவதால், அதனையும் அறு வடை செய்து சந்தைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகி றது. இதேபோன்று, ஒட்டன் சத்திரம், பழனி, திண்டுக்கல் பகுதியிலிருந்தும் பொள்ளாச்சி சந்தைக்கு தக்காளிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த சில வார மாக தக்காளி வரத்து ஏற்றம் இறக்கத்தால், கடந்த மாதம் ஒருகிலோ தக்காளி விலை ரூபாய். 8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலை தற்போதும் தொடர்கிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி, மார்ச் 19- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, ஒனேக்கல்லுக்கு நீர்வ ரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது விநாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது. கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகு திகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திடீரென்று நீர்வரத்து அதிக ரிக்க தொடங்கி விநாடிக்கு 2500 கன அடியாக இருந்தது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வந்த டைந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பி டிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டு லுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறை வதுமாக இருந்து வருகிறது. அதன்படி, திங்களன்று மாலை நேர நிலவரப்படி விநாடிக்கு 300 கன அடியாக சரிந் தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு செவ்வாயன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதி கரித்து 400 கன அடியாக வந்து கொண் டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக் கல் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள் ளது. மழை அளவை பொறுத்து ஒகே னக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறை வதும், அதிகரிப்பதுமாக இருப் பதால் மத்திய நீர் வளத்துறை அதிகா ரிகள் பிலிக்குண்டுலுவில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.
காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற விவசாயிகளுக்கு நிவாரணம் தரக் கோரிக்கை
காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற விவசாயிகளுக்கு நிவாரணம் தரக் கோரிக்கை உடுமலை, மார்ச் 19- உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் பல ஆயிரக்க ணக்காண ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. இதன் மூலம் கணிசமான வருமானத்தை விவ சாயிகள் பெற்று வந்தனர். இந்நிலையில், தற்பொழுது பருவ மழை இல்லாமல் போனதால் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற முடியாம லும், காய்ந்த மரங்களை முழுமையாக அகற்ற சில ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால் விவ சாய நிலங்களில் அகற்றப்படாத தென்னை மரங்கள் உள் ளது. எனவே, தமிழக அரசு காய்ந்துபோன தென்னை மரங்களை அகற்ற எங்களுக்கு உரிய நிவாரணம் தர வேண் டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சம்: பறக்கும் படையினர் கைப்பற்றினர்
ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சம்: பறக்கும் படையினர் கைப்பற்றினர் அவிநாசி, மார்ச்.19- அவிநாசி அருகே திருப்பூர் செல்லும் சாலையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவ ணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவிநாசியில் பறக்கும் படை சி பிரிவு காவலர்கள் திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகு தியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை யில் இருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்தில் வந்த சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்ற நபர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட பறக்கும் படை அதி காரிகள் ரஹமத்துல்லாவை விசாரித்து, தோல் பையை சோதனை செய்துள்ளனர். அதில், 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்துள் ளது. இதற்கிடையில் ரஹ்மத்துல்லாவை அழைத்து வருவ தற்காக திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற நபர் வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இவர்கள் இரு வரையும் பறக்கும் படையினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இப்பணத்தை திருப் பூர் மாவட்ட வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து:
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: அவிநாசி, மார்ச் 19- அவிநாசி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி நின்றதால் பயணிகள் உயிர் தப்பினர். சேலத்திலிருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. தெக்கலூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தேசிய நெடுஞ் சாலை பால துவாரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்துக்குள் இருந்த 40க்கும் மேற்பட்ட பய ணிகள் உயிர் தப்பினர். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இதே துவாரத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் சேலத்திலிருந்த வந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தேசிய நெடுஞ் சாலைத் துறையினர் துவாரத் தடுப்பை உயர்த்தி, வாகனங்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுதானிய உணவுகள் குறித்த பல்லடத்தில் விழிப்புணர்வு:
சிறுதானிய உணவுகள் குறித்த பல்லடத்தில் விழிப்புணர்வு: திருப்பூர், மார்ச் 19- பல்லடத்தை அடுத்த சித்தம்பலத்தில் சிறுதானிய உணவு கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கனன்று நடை பெற்றது. அங்கன்வாடி மையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஊராட்சித் தலைவர் தலைமை வகித்தார். அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுப்பிரியா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிறு தானி உணவுகளில் உள்ள சத்துகள், அதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டன. இந்த ஊர்வலத்தில் அங்கன்வாடி மையக் குழந்தைகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறைகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
திருப்பூர், மார்ச் 19- திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக் குட்பட்ட திருப்பூர் வடக்கு, கோபிசெட்டிபா ளையம், அந்தியூர், பவானி மற்றும் பெருந் துறை ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறைகளை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 குறித்த அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணை யத்தால் 16 ஆம் தேதியன்று வெளியிடப் பட்டது. பொதுத்தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிக ளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் இருப்பறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரான தா. கிறிஸ்துராஜ் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி, வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி மின்னணு இயந்திரங்கள் இருப்பறை, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அந்தி யூர் வட்டாட்சியர் அலுவலகம், பவானி வட் டாட்சியர் அலுவலகம், பெருந்துறை வட்டாட் சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் மின் னணு இயந்திரங்கள் இருப்பறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரான தா.கிறிஸ்துராஜ், பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் போதுமான குடிநீர் வசதிகள், மாற்றுதிறனா ளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் மேற்கொள்ளுமாறு சமந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பன வர், திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், கோபிசெட்டிபாளையம் வரு வாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தர்ம ராஜ், ராம்குமார், வெ.ராஜகோபால் வட்டாட் சியர்கள் கார்த்திக் (கோபி செட்டிபாளை யம்), தியாகராஜன் (பவானி), பூபதி (பெருந் துறை) மற்றும் மற்றும் தொடர்புடைய தேர் தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள்: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
உடுமலை, மார்ச் 19- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதி களில் உள்ள விளைநிலங்களை காட்டு விலங்குகள் நாசப்படுத்தி வருகிறது. மேலும், விவசாயிகளையும் தாக்கி வருகிறது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயி களின் பயத்தைப் போக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. சில வாரங்களாக மலைப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், காட்டு விலங் குகள் உணவு மற்றும் குடிநீருக்காக மலை அடிவார பகுதிக்கு வருகின்றன. அப்படி வரும் காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. ஜல்லிபட்டி, கொங்குரர் குட்டை, பொன்லாமன் சோலை, அம ராவதி உள்ளிட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாய் களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. ஏற்கனவே காட்டுப்பன்றிகள் மலை அடிவார பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்கலம் ஒன்றியப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் விவசா யிகளை தாக்கி வருவது தொடர்கதை யாக உள்ள நிலையில், தற்பொழுது காட்டு யானைகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், கோடைக் காலம் தொடங்கி உள்ள தால், காட்டுப் பகுதியில் உள்ள விலங்கு கள் விளை நிலங்களுக்கு வர ஆரம்பித் துள்ளது. வனத்துறையினர் காட்டுப்ப குதியில் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், மலைப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வர முடியாத வகையில் மலையடிவார பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகலிகள் அமைக்க வேண்டும். என வன விலங்கு களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
ரூ.2.61 லட்சம் பறிமுதல்
ரூ.2.61 லட்சம் பறிமுதல் தருமபுரி, மார்ச் 19- அரூர் அருகே வாகன தணிக்கையின் போது ஆவ ணமின்றி எடுத்துச் செல்லப் பட்ட ரூ.2.61 லட்சத்தை பறக் கும் படையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அனுமந்தீர்த் தம் சோதனைச்சாவடி அருகே பறக்கும் படை குழு வினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, திருப்பத்தூரில் இருந்து அரூர் நோக்கி உதய பிரகாஷ் என்பவர் ஒட்டி வந்த காரை சோதனை செய்த பொழுது, அதில் உரிய ஆவ ணமின்றி ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 500 எடுத்துச்செல் லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்னண், தேர்தல் நடத்தும் அலுவலர் ரா.வில்சன் ராஜசேகர் முன் னிலையில் அரூர் உதவி கரு வூல அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர்.
குட்கா பறிமுதல்
குட்கா பறிமுதல் கோவை, மார்ச் 19- கோவை மாவட்டம், ஆனைகட்டி சாலை, சின்ன தடாகம் தண்ணீர் பந்தல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோத னையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வாக னத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 28 கிலோ குட்கா புகையிலை மறைத்து வைத்து கடத்தி வந் தது தெரிய வந்தது. விசார ணையில், புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத் தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பதும், இவர், கோவை சரவணம்பட்டி பகு தியில் தங்கி ஓட்டுநர் பணி செய்து வருவதும் தெரியவந் தது. இதனையடுத்து குட் காவை பறிமுதல் செய்த தேர் தல் பறக்கும் படை அதிகாரி கள் தடாகம் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.