சேலம், செப்.25- இடங்கணசாலை நகராட்சிக்குட் பட்ட சின்ன ஏரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சி, 9 ஆவது வார்டுக் குட்பட்ட கஞ்சமலையூர் சின்ன ஏரி சுற் றுவட்டப் பகுதியில் சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற் றும் வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையம் அமைக்க நக ராட்சி சார்பில், சின்ன ஏரி பகுதியி லுள்ள மாயன இடத்தில் 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட மிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படும் பட்சத் தில் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும். ஏற்கனவே அமைக் கப்பட்ட குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்திலிருந்து வெளியாகும் வண் டுகள் மற்றும் துர்நாற்றத்தினால் மக் கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தற்போது இதேபகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இத னைத்தொடர்ந்து கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கும் பட்சத் தில், இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் என அனை வரும் பாதிக்கப்படுவர். மேலும், விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்.1 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், இத்திட் டத்தை மாற்று இடம் தேர்வு செய்து அமைக்க வலியுறுத்தி நகராட்சி அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செப்.7 ஆம் தேதி யன்று இடங்கணசாலை நகராட்சிக் குட்பட்ட கே.கே.நகர், இ.காட்டூர், கஞ்சமலையூர், சின்ன ஏரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற் பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு, போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து திங்க ளன்று நகராட்சி ஆணையர் தலை மையில் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற் பட்ட பொதுமக்கள், நகராட்சி தலை வர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் பெரும்பாலானோர் இத்திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர் மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தினர். மேலும், இத்திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள், மீண்டும் புகார் மனு அளித்த னர். இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர் அதிகாரி களிடம் எடுத்துரைத்து, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். அதே சமயம் அப்பகுதி பொதுமக்கள், கழி வுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கும் பட் சத்தில் பெரும் போராட்டத்தில் ஈடு படுவோம், என்றனர்.