கோவை, ஆக.29- குறைந்தபட்ச பென்சன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கோவையில் ஓய்வூதியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்களுக்கு, இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ரயில்வே கட்டணச்சலுகையை மீண்டும் அமல்ப டுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தகுதியுள்ள அனைவருக்கும் உயர் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட இபிஎப், பென் சனர்கள் சங்கத்தின் சார்பில், கோவை, துடியலூர் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. புஷ்பராஜன் தலைமை ஏற்றார். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் என்.சின்னசாமி போராட் டத்தை துவக்கிவைத்தார். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் ஏ. ஆர்.துரைசாமி, ஆர்.செல்வராஜ், கே.குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தை வாழ்த்தி சகோதர சங்கங்க ளின் நிர்வாகிகள் உரையாற்றினர். முடிவில், எஸ்.ஆர்.மணி நன்றி கூறினார்.