அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
தருமபுரி, ஏப். 2- விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் ஆதார் கார்டு, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை அரசிடம் ஒப்படைப்பதாக கூறிய நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை முற்று கையிட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவ னகுந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், விவசாய விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிக்காக, தருமபுரி மாவட் டம் நல்லம்பள்ளி அருகே கீழ்பூரிக்கல் கிராமத்தில் சாலை யோரம் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் இரும்பு குழாய் களை இறக்கி வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த அப்பகுதி விவசாயிகள், தங்களது விவசாய விளை நிலங்கள் வழியாக, பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் பணியை தவிர்த்து, பரிகம் காப்புக்காடு, தொப்பூர் வனப்ப குதி வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலி யுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, விவசாய விளை நிலங்களில் கருப்புக்கொடி ஏற்றியும், வரும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் ஆதார் கார்டு, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை அரசிடம் ஒப்படைப்பதாக கூறி, சம்மந் தபட்ட கிராமத்தில், அப்பகுதி விவசாயிகள் நோட்டீஸ் ஒட்டி யுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நல்லம் பள்ளி தாசில்தார் பார்வதி தலைமையிலான வருவாய்த்து றையினர் மற்றும் சம்மந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், நல்லம்பள்ளி அருகே கீழ்பூரிக்கல் அப்பர் சாமி கோயில் வளாகத்தில் திரண்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையின் போது, திடீரென விவசாயிகள் தங்களது கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் சுமார் ஒருமணிநேர பேச்சு வார்த்தைக்குபின், விவசாய விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணியை, விவசாயிகளுக்கு பாதிக்காதவாறு வனப்பகுதி வழியாக பதிக்க நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்த பின்னர், முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேவைக் குறைபாடு: தனியார் டிராவல் நிறுவனத்திற்கு அபராதம்
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
நாமக்கல், ஏப்.2- மதுரையைச் சேர்ந்த தனியார் டிராவல் நிறுவனம் செய்த சேவைக் குறைபாடு காரண மாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் வழங்க வேண்டும் என நாமக் கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கட்ட பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முத்துகி ருஷ்ணன் (65). இவர் தனது குடும்பத்துடன் அமர்நாத் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த சமயத்தில் மதுரையில் உள்ள ஸ்ரீமுருகன் டிராவல்ஸ் ஏஜென்சி அமர்நாத் சுற்றுலா அழைத்துச் செல்வதாக விளம்பரம் செய்ததை பார்த்துள் ளார். கடந்த 2022 ஆண்டு ஜூலை மாதத்தில் டிராவல் ஏஜென்சியின் கோவை கிளையில் தனக்கும், தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் விஜய் ஆகியோருக்காகவும் அமர்நாத் சென்று வர ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், யாத்திரை ஏற் பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டபடி, ஸ்ரீநகரில் இருந்து அமர்நாத் செல்வதற்கு ஹெலிகாப் டர் கட்டணத்தை செலுத்தி பயணச்சீட்டை பெற்று தரவில்லை. இதனால் தாங்களே பயண கட்டணத்தை செலுத்தியதாகவும், வானிலை மோசமாக இருந்ததால், திட்ட மிட்ட நாளில் திரும்ப இயலாதால் வேறு நாளில் திரும்பி வர ஸ்ரீநகரிலிருந்து சென்னை வர விமான கட்டணத்தை சுற்றுலா ஏற்பாட்ட ளர்கள் செலுத்தவில்லை. இதனால் தாங் களே விமான கட்டணம் செலுத்தி மூவரும் சென்னை வந்துள்ளனர். ஒப்புக்கொண்டபடி பயண ஏற்பாட்டாளர்கள் சேவை செய்யாத தால் தங்களுக்கு கூடுதலாக ஏற்பட்ட செலவு தொகையையும், இழப்பீடும் கேட்டு கடந் தாண்டு ஜனவரி மாதம் கோவை மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ர வரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், பயண ஏற்பாட்டளர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரி வித்துள்ளனர். அமர்நாத்துக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் பயணச்சீட்டை பணம் செலுத்தி தாங்கள் பெற்று இருந்தோம். வழக்கு தாக்கல் செய்தவரும், அவரது குடும் பத்தினரும் முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதற்காக அவர்களாகவே பணம் செலுத்தி முன்னதாகவே கிளம்பிய ஹெலி காப்டரில் அமர்நாத் சென்றனர். இதனால் அவர்கள் தன்னிச்சையாக சென்றதற்கு நாங் கள் பொறுப்பல்ல என சுற்றுலா ஏற்பாட்டா ளர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் முத்துக்கிருஷ்ணனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முன்பதிவு செய்த ஹெலிகாப்டர் பயணச்சீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் பயண ஏற்பாட்டாளர்களின் வாதம் ஏற்புடை யதல்ல என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வானிலை மோசமாக இருந்த தால் அமர்நாத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்து முன்பதிவு செய்திருந்த விமானத்தில் பய ணிக்க இயலவில்லை. இப்படி சூழ்நிலை ஏற் பட்டால் வாடிக்கையாளர்களே புதிதாக விமா னத்திற்கு முன்பதிவு செய்து செய்ய பணம் செலுத்த வேண்டும் என்று சுற்றுலா நிபந் தனை இருப்பதாக சுற்றுலா ஏற்பாட்டாளர் கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இத்தகைய நிபந்தனையை தெரிவித்து சுற்றுலாவிற்கு பதிவு செய்தவர்களிடம் ஒப்புகை சீட்டை எத னையும் சுற்றுலா ஏற்பாட்டாளர் பெற வில்லை என்பதால் அவரது வாதம் ஏற்புடை யது அல்ல என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, சேவை குறைபாடு காரணமாக வழக்கு தாக்கல் செய்தவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட கூடுதல் செலவு, இழப்பீடு மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை நான்கு வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்வதற்கு வழங்க வேண்டும் என நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தபால் வாக்குகள் – சேலம் ஆட்சியர்
தபால் வாக்குகள் – சேலம் ஆட்சியர் சேலம், ஏப். 2- சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியர் இரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, சேலம் மக்களவைத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 5, 6 மற்றும் 8 ஆகிய மூன்று தேதிக ளில், வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் படிவம் 12 டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்கு பதிவு செய்திட சம்மந்தப்பட்ட சட்ட மன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்க ளால் அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 12 டி விண்ணப்பம் அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்கு வருகை தரும் குழுவினரிடம் தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை காண்பித்து தபால் வாக்கினை செலுத்தலாம். வாக்கு செலுத்தும் சமயத்தில், தபால் வாக்குப் பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் இடங்களில் வேட்பா ளர்கள் நேரடியாக பார்வையிடவும், வேட்பாளர்களின் பிரதிநி திகள் மூலமும் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறது. அதே போன்று, இராணுவத்தினரின் வாக்குகள் 07.04.2024 முதல் வாக்கு எண்ணும் நாளான 04.06.2024-க்கு முந்தைய நாளான 03.06.2024 வரை அஞ்சல் மூலம் வரப்பெறும் என்பதால் தங்க ளின் முகவர் மூலமும் பார்வையிடலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிந்தவர் மோடி: துணை நின்றவர் எடப்பாடி
சேலம், ஏப்.2- தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளை பிரதமர் மோடி பறித்து வருவதற்கு, துணை நின்றவர் எடப்பாடி பழனிச்சாமி என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெ ருந்தகை சாடியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். அந்த வகையில், சேலம் மாவட்டம், எடப் பாடி அருகே உள்ள இருப்பாலை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக வேட் பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல் வப்பெருந்தகை எம்எல்ஏ பேசியதாவது: முன் னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந் தபோது, உதய் மின் திட்டத்தில் சேர மாட் டேன் என நிராகரித்தார். ஆனால், அத்திட்டத் தில் கையெழுத்திட்டு மின்சார கட்டண உயர் வுக்கு காரணமாக இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப் பவர் மோடி; அதற்கு துணையாக நின்றவர் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி வாக்கு றுதி அளித்து 10 ஆண்டுகள் ஆகிறது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெட் ரோல், டீசல் விலை பாதியாக குறைப்பேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற் றியுள்ளார். இவர் ஆட்சிக்கு வரும்போது அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 609 ஆவது இடத்தில் இருந்தார். ஆனால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு உலக பணக்காரர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் வளங்களை அதானியிடம் ஒப் படைத்ததுதான் மோடி அரசின் சாதனை, என் றார். முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சரளா சேதுராமன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் காங்கிரஸ், திமுக உ ள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.
90 நாளில் 50 வழக்குகள் - 28 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை, ஏப்.2- கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப் படையில், பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு அமலாக்க காவல்துறையினர் சோம னூர் பிரிவு அருகே சோதனை மேற்கொண்ட னர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சாபிஹாரி(48) மற்றும் ஹேமந்தஸ் மகன் சூர்யகாந்தா ஸ்வீன் (49) ஆகிய இரண்டு நபர் களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கோவை மாவட்டத்தில் போதை பொருட் களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்டு வரும் துரித நடவடிக்கையின் பேரில், கடந்த ஜன. 1ஆம் தேதி முதல், தற் போது வரை காவல்துறையினரால் நடத்தப் பட்ட அதிரடி சோதனைகளில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்தும், அவர்க ளிடமிருந்து சுமார் 28.420 கிலோ கிராம் எடை யுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புள்ளிமானைப் பங்கு போடும் செந்நாய் கூட்டம்
புள்ளிமானைப் பங்கு போடும் செந்நாய் கூட்டம் கோவை, ஏப்.2- ஆனைமலை அடுத்த பரம்பிக்குளம் டனல் பகுதியில் புள்ளிமானின் உடலை செந்நாய் கூட்டம் பங்கு போடும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் நிலவு வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்விடங்கள் மற்றும் காடு உள்ளிட்ட பகுதிகள் வறட்சியாக உள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் காட்டை விட்டு, வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நி லையில் ஆனைமலை அடுத்த பரம்பிக்குளம் டனல் அருகே செந்நாய் கூட்டம் ஒன்று புள்ளி மானின் உடலை பங்கு போட்டு உண்ணும் காட்சி தற்போது சமூக வலைதளங்க ளில் பரவி வருகிறது. பொதுவாக அடர்ந்த காட்டின் நடுவே வேட்டையாடப் படும் விலங்குகளின் காட்சிகள் தென்படும். ஆனால், தற்போது வறட்சி நிலவுவதால் அணைக்கரையோரம் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் ஓரம், இது போன்ற காட்சிகள் தென்படுகிறது.இந்த காட்சியால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சத் தில் உள்ளனர்.
தேர்தல் திருவிழா : உறுதிமொழிப் படிவம்
தேர்தல் திருவிழா : உறுதிமொழிப் படிவம் ஈரோடு, ஏப். 2- நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் குடும் பத்தில் உள்ள வாக்காளர்களிடம் கையொப்பம் பெற்று உறுதி மொழிப் படிவம் வாங்கி வர வைக்கப்பட்டது. ஈரோடு எஸ் கே சி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் மக்களவைத் தேர்தல் 2024க்கான தேர்தல் திருவிழா தேசத்தின் பெரு விழா உறுதிமொழிப் படிவம் கொடுக்கப்பட்டது. பின்பு மாணவ, மாணவியர்களின் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களிடம் கையொப்பம் பெற்று உறுதிமொழிப் படிவம் வாங்கி வர வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் மணிஷ் கலந்து கொண்டு பேசுகையில், வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி மாணவர்கள் வீட்டில் உள்ள வாக்களிக்கும் உரிமை பெற்ற அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர் களை கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
கிரசர், எம்சாண்ட் லாரிகளை ஆய்வு செய்திடுக
திருப்பூர், ஏப்.2- கல்குவாரிகளில் இருந்து இயக்கப்படும் கிரசர் மற்றும் எம் சாண்ட் டிப்பர் லாரிகளை தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜை, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கிரசர் மற்றும் எம்சாண்ட் எடுத்துச் செல்லப்படும் டிப்பர் லாரிகள் 200க்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் அவற்றை சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். அதேபோல் பெரும்பாலான கல் குவாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்களால் நடத்தப்படுவதால் அவை இது போன்ற செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் கல்குவாரிகளில் அரசால் தடை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம்
கோவை, ஏப்.2- பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகு தியில் போட்டியிடும் அனைத்து வேட்பா ளர்கள் மற்றும் வேட்பாளர்களால் அங்கீ கரிக்கப்பட்ட முகவர்களும், தேர்தல் செல வினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட் டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் நடத்தும் அலுவ லரும், மாவட்ட வருவாய் அலுவலரு மான ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகு தியில், போட்டியிடும் அனைத்து வேட்பா ளர்கள் மற்றும் வேட்பாளர்களால் அங்கீக ரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம், பொள்ளாச்சியில் உள்ள மீனாட்சி ஹாலில் வருகிற ஏப். 5, 10 மற்றும் ஏப். 16 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. அப்போது, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களால் அங்கீகரிக்கப் பட்ட முகவர்களும், தேர்தல் செலவினங் கள் தொடர்பான உரிய கணக்குகளுக் கான பதிவேடுகளுடன் பின்வரும் நாட்க ளில் புகைப்பட அடையாளத்துடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணித்துளி மழை - விவசாயிகள் ஏமாற்றம்
உதகை, ஏப். 2– உதகையில் சில மணித்துளியே பெய்த மழையால் விவசாயிகள் ஏமாற்றமடைந்த னர். நீலகிரியில் ஆண்டு சராசரி மழை அளவு, 152 செ.மீ, கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததால் தேயிலை, மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில், ஏப். மாதம் துவங்கியும் கோடை மழை பெய்யவில்லை. விவசாயிகள் மழை எதிர் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், செவ் வாயன்று மாலை உதகையில் லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது. உதகை சுற்றுவட்டார பகுதிகளான எப்பநாடு, கடநாடு, தும்மனட்டி சுற்று வட்டார பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்து நின்றது. மழை நீடிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் சில நிமிடம் மட்டும் பெய்து மழை நின்றதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். மழை பெய்ததால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் உதகை முழுவதும் குளு குளு என சீதோன சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
நாளை முதல் தபால் வாக்குகள் பதிவு
ஈரோடு, ஏப்.2- வியாழனன்று (நாளை) முதல் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணியை சேகரிப்பு குழு மேற்கொள்ளவிருக்கிறது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கூறுகை யில், தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற் றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப் படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேற்படி, வாக்காளர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக சம்மந்தப்பட்ட சட்ட மன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக் கும் குழு அவர்களது முகவரிக்கு வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நேரடியாக சென்று தபால் வாக்குகளை வழங்கி வாக்க ளித்த பின் திரும்ப சேகரிப்பர். மேற்படி, வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலர், ஒரு வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண்கண்காணிப்பு அலுவலர், வீடியோ கிராபர், சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர் மற்றும் ஆயுதமேந்திய காவலர் ஆகியோர் இடம்பெறுவர். மேலும், சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்க ளும் உடனிருந்து கண்காணிக்கலாம். முதல் முறை வாக்கு அளிக்க முடியாதவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பாக 8 ஆம் தேதி வாக்கு சேகரிப்பு குழு அவர்களது முகவரிக்கு மீண் டும் சென்று வாக்கு சேகரிக்கும். இவ்வாறு ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வாகன சோதனை தீவிரம்
வாகன சோதனை தீவிரம் உதகை, ஏப். 2- நீலகிரி மக்களவை தொகுதியில் பறக்கும் படை எண் ணிக்கை, 72 ஆக உயத்தப்பட்டதை அடுத்து வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவை தொகுதியில் உதகை, குன்னூர், கோத் தகிரி, மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைப்படி நீலகிரி (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக தலா, 3 பறக் கும் படை குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் தற்போது, நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகு திகளில் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண் ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் உத்தரவுப்படி திங்களன்று தலை குந்தா உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர்.
கோவை - சொரனூர் ரயில் ரத்து
கோவை - சொரனூர் ரயில் ரத்து கோவை, ஏப்.2- தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பில், கோவை - பாலக்காடு மார்க்கத் தில், எட்டிமடை - வாளையார் பகுதியில் யானை வழித்தடம் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோவை - சொரனூர் இடையேயான ரயில் வரும் 4 ஆம் தேதி ரத்து செய்யப்படும். மறுமார்க்கத்தில், சொரனூர் - கோவை இடையேயான ரயிலும் அன்றைய தினம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.