திருப்பூர், ஜூலை 11 – அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து திங்களன்று திருப்பூர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற கருப்புத்தின ஆர்ப்பாட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட அங் கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார் வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடித்த உதவி யாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் கள் அதிகளவில் சுகாதாரப் பணிகள் செய்வ தால் அவர்களுக்கு கிராமப்புற செவிலியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பதவி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங் களை ஊழியர்கள் இல்லை என ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவைக் கைவிட வேண் டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த இயக்கம் மாநில அளவில் நடத்தப் பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத் தில் உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கே யம், திருப்பூர் ஊரகம், திருப்பூர் நகரம், குடி மங்கலம், குண்டடம், ஊத்துக்குளி, அவி நாசி, மடத்துக்குளம், பொங்கலூர், வெள்ள கோவில் உள்ளிட்ட 13 மையங்களில் சக்தி மிக்க முறையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. அந்தந்த வட்டார நிர்வாகிகள் பங் கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். இதில் 1500க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.