districts

பள்ளி மாணவனை தாக்கிய எஸ்.ஐ., காவல் ஆணையரிடம் பெற்றோர் புகார்

திருப்பூர், நவ.4– திருப்பூர், நஞ்சப்பா அரசு மேல்நி லைப்பள்ளியில் படித்து வரும் தங்கள் மகனை பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அடைத்து வைத்து உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் என்பவர் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதாக மாணவரின் பெற்றோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யத்தில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.எஸ்.சி. அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த புதனன்று இப் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடு மையாகத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கடுமையாக எச்சரித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் நிலமையை எடுத்துரைத்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் நஞ்சப்பா பள்ளியில்  11ஆம் வகுப்பு பயிலும் மாணவனை தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர் ரஜினிகாந்த் புறக்காவல் நிலை யத்திற்குள் இழுத்துச் சென்று கடுமை யாகத் தாக்கி கைவிரலை உடைத்து விட்டதாக அம்மாணவனின் பெற்நோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். கடந்த புதனன்று பேருந்து நிலை யத்தில் இருந்து அணைப்பாளையத்தில் உள்ள தமது வீட்டுக்கு வருவதற்காக மாணவர் சென்றிருக்கிறார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் கே.ரஜினி காந்த் தனது மகனை எவ்வித முன் விசாரணையும் இல்லாமல் புறக்காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று கதவுகளை அடைத்துவிட்டு மனிதா பிமானம் இல்லாமல், பள்ளி சீருடையில் இருந்த மாணவர் என்றும் பார்க்காமல் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். வயிற் றில் எட்டி உதைத்து, காதில் தொடர்ச்சி யாக அறைந்துள்ளார். மேலும் இடதுகை மோதிர விரலை உடைத் துள்ளார். இதுதொடர்பாக மாணவரின் தாயார் காவல் நிலையத்திற்குச் சென்று ஏன் அடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, முறையாக பதில் அளிக்காமல், இப்போதே மாணவனை அழைத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் அவன் மீது பொய்  வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மேற்படி உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது டன், பாதிக்கப்பட்ட மகன் மற்றும் குடும்பத்தாருக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.