districts

img

கல்வி உரிமைச்சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளி

கோவை, பிப்.15- கல்வி உரிமைச்சட்டத்தை மதிக் காமல் மாணவர்களுக்கு மனவு ளைச்சலை ஏற்படுத்தி, அலைகழிப் புக்குள்ளாக்கிய தனியார் பள் ளியை பெற்றோர்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி கோவை சாலை யில், பிகேடி மெட்ரிக் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில், கல்வி உரிமைச்சட்டத் தின் கீழ் 25 சதவிகித இலவச கல்வி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 15 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தற் போது ஓராண்டு கழித்து தேர்வு செய்யப்பட்ட 15 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி, கட்ட ணம் செலுத்தினால்தான் கல்வி பயில முடியும், பிள்ளைகளை பள் ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று  பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், செய்வதரியாமல் பெற்றோர்கள் கடும் அவதிக்குள் ளாகினர். பின்னர், பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதனையடுத்து, பெற் றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இடையே நடந்த பேச்சுவார்த்தை யில், இதுவரை மாவட்ட கல்வி  அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு ஒப்புதல் கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதைய டுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திற்க்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும், தனியார் பள்ளி கண்டுகொள்ளாமல் இருந் துள்ளது என்று குற்றம்சாட்டினர். பள்ளி நிர்வாகமும், மாவட்ட  கல்வி அதிகாரிகளும் மாறிமாறி  பெற்றோர்களை அலைகழிப்புக் குள்ளாக்கினர். இதுகுறித்து, பெற் றோர்கள் கூறுகையில், கல்வி உரி மைச்சட்டத்தை தனியார் பள்ளிகள் காலில் போட்டு மிதிக்கிறது. எங்கள் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் எல் லாம் கேள்விக்குறியாகிறது. உடன டியாக அரசு தலையிட வேண்டும். எங்களின் மனவுளைச்சலுக்கு கார ணமான தனியார் பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், என் றனர்.