districts

img

தனியார் பள்ளியில் போலி சான்றிதழ் வழங்கல்? - பெற்றோர்கள் அதிர்ச்சி

இளம்பிள்ளை, டிச.21- இளம்பிள்ளை அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் போலி சான்றிதழ் வழங்கப்படுவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, கே.கே.நகர் பகுதியில் சுவாமி விவேகா னந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆங் கில வழி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு படித்து முடித்த மாண வர்களுக்கு பள்ளியின் முத்திரை இல்லா மல் போலி சான்றிதழ் வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலித்துள் ளது.  இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிலர் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கல்வி  அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் தெரி வித்துள்ளனர். இதன்காரணமாகவே மாண வர்கள், பெற்றோர்களை பழிவாங்கும் வகையில், பள்ளியின் முத்திரை இல்லா மல் சான்றிதழ் வழங்கி வருவதாக கூறப் படுகிறது. ஆகவே, இதுதொடர்பாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள் ளிட்ட அதிகாரிகள் உரிய விசாரணை செய்து  பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

;