districts

img

பிஏபி பகிர்மானக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

உடுமலை, மார்ச் 10- பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட் டத்தின் உடுமலை, பூலாங்கிணறு மற் றும் புதுப்பாளையம் பிரதான பாசன  வாய்க்கால்களுக்கான பகிர்மானக் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்க ளுக்கான தேர்தல் மார்ச் 10 ஆம் தேதி உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உடுமலை, புலாங்கிணறு வாய்க்காலுக்கு அருண் மற்றும் புதுப் பாளையம் வாய்க்காலுக்கு நித்தியா னந்தம் ஆகியோர் போட்டியின்றி பகிர் மானக்குழு தலைவர்களாக தேர்வு செய் யப்பட்டனர். பிஏபி திட்டத்தின் கீழ் உடு மலை, பூலாங்கிணறு மற்றும் புதுப்பா ளையம் பிரதான வாய்க்கால்களுக்கு 35  உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு  செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது 2  தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  பகிர்மானக்குழு தலைவர்களிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது, பல ஆண் டுகள் பராமரிப்பு செய்யாமல் உள்ள  வாய்க்கால்கள் மற்றும் மதகுகளை பரா மரிப்பு செய்ய வேண்டும். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது  பணித்துறையில் ஊழியர் பற்றாக்கு றையால் கால்வாய் பராமரிப்பு மற்றும்  நீர் விநியோகம் செய்ய முடியாமல்  உள்ளதை போக்கும் வகையில் பொதுப் ணித் துறையில் புதிய ஊழியர்களை நிய மனம் செய்ய வேண்டும். கடந்த பத்து  வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சி  காலத்தில் நீர் பாசன கருத்தரங்கம் நடை பெற்றது. ஆனால் தற்பொழுது வரை  எந்த கருத்தரங்கமும் நடைபெற வில்லை. உடனடியாக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தலைமையில் நீர்ப்பா சன கருத்தரங்கம் நடத்த திட்டக்குழு தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.