districts

img

4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பஞ்சம்பள்ளி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி, டிச.7- தருமபுரி பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப் பள்ளி சின்னாறு அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி யதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 48 அடி  உயரத்திற்கு நீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 187 கன அடியாக உள்ளது, 70 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால்  பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள் ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4500 ஏக்கர் விளை  நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

;