districts

img

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திடுக

கோவை, ஜூன் 1- கோவையில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் மேம்பால  பணிகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். குறித்த காலத்திற்குள் மேம்பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம், பி.ஆர்.நடராஜன் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மக்கள் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக் கைகள் குறித்த மனுக்களை அளித்தார்.

இதில், சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியினை துரிதப் படுத்த வேண்டும். ஏற்கனவே அங்கு இணைப் புகள் கொடுக்கப்பட்டிருந்ததால், இணைப்பு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும். புலியகுளம், மசால் லே - அவுட் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு, நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் மூலம் அந்த  இடத்தை வகைமாற்றம் செய்து, மக்களுக்கு உதவ வேண்டும். மேட்டுப்பாளையம் சாலை யில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே மேம்பால பணிகள் தாமதமாகி வருகிறது. அதிகாரிகள் ஒப்புக் கொண்ட தேதியில் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். சிவானந்தா காலனியிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் சாலை பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கவும், பாலத்தின் கீழே கழிவுகள் கொட்டாதவாறு தகடு பொருத்தவும் பணி கள் துவங்கப்பட்டுள்ளது. அப்பணிகள் ரயில்வே, மாநில நெடுஞ்சாலை துறை மற் றும் போக்குவரத்து காவல் துறையோடு இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண் டும். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற உத் தரவின்படி இழப்பீடு வழங்க வேண்டும், என் றார். இந்த சந்திப்பின் போது மாவட்ட வரு வாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், ரயில்வே துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதி காரிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே. எஸ்.கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

எம்.பி., நிதியில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறப்பு

கோவை, சூலூர் தாலுகா, கலங்கல் ஊராட்சிக்குட்பட்ட காசிகவுண்டன் புதூ ரில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பல்நோக்கு கட்டடம் கட்ட  ரூ14.35 லட்சம் நிதியினை பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஒதுக்கீடு செய்தார்.  இதனைய டுத்து கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட் டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வியாழனன்று திறந்து  வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்ன வன், கலங்கல் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கூட்டுறவு சங்க தலைவர், சூலூர்  வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.