தருமபுரி, செப்.12- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, தருமபுரியில் கொடியேற்று விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தின கொண்டாட்டம் தருமபுரி மாவட் டம் முழுவதும் வியாழனன்று நடைபெற்றது. தருமபுரி சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள ஆர்.டி.நகரில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் மு.முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்டப் பொருளாளர் கே. வினோத்குமார், மாவட்ட தணிக்கையாளர் பெ.முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சங்கத்தின் வட்டத் தலைவர் ரா.ராஜீவ், நல்லம்பள்ளியில் வட்ட தலைவர் மணி வேந்தன், அரூரில் வட்ட தலைவர் கோவிந்தன் மொரப்பூ ரில் வட்ட தலைவர் வீரமணி, பாப்பிரெட்பட்டியில் வட்டத் தலைவர் தீபா, காரிமங்கலத்தில் மேகநாதன், பாலக் கோட்டில் வட்ட தலைவர் குணசேகரன், பென்னாகரத்தில் வட்ட தலைவர் குமார், ஏரியூரில் வட்ட தலைவர் பால கிருஷ்ணன், கடத்தூரில் வட்டத் தலைவர் வீரமணி ஆகி யோர் தலைமையில் அமைப்பு தின விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.