districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல், அக்.31- நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மூலம் லாரி உரிமையாளருக்கு ரூ. 4.95  லட்சம் இழப்பீடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தர விடப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள  மூலப்பள்ளி பட்டியில் கிராமத்தில் வசித்து வருபவர் கோபி  (52).  இவருக்கு சொந்தமான லாரி 2013 ஆம் ஆண்டில் கிருஷ்ண கிரி அருகே விபத்துக்குள்ளானது. இதையடுத்து, இழப்பீடு வழங்கக்கோரி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் (ஐசிஐசிஐ  லம்போடு) முறையிட்டிருந்தார். ஆனால், உரிய காப்பீட்டுத் தொகையை வழங்காததால் 2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கோபி வழக்கு தாக்கல்  செய்தார். இந்த வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.5,05000 மற்றும் விபத்து ஏற்பட்ட நாளிலிருந்து இத்தொகைக்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டி ருந்தது.  ஆனால், தீர்ப்புப்படி இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தவில்லை. இதனால், சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பை நிறைவேற்றி தருமாறு  கோபி, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இதனை  விசாரித்த நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ், இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் மற்றும் முகவர் ஆகியோருக்கு  வாரண்ட் பிறப்பித் தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் செவ்வாயன்று நடை பெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டது.  சம ரச ஒப்பந்தப்படி இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.4.95 லட்சத்துக்கான காசோலையை நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வழக்கு தாக்கல் செய்தி ருந்த கோபியிடம் வழங்கினார்.

பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்

ஈரோடு, அக்.31- சிறுத்தை குறித்த பொய்யான தகவல் களை பரப்ப வேண்டாம் என பொதுமக்க ளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ள னர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அரச்ச லூர் பகுதியில் கால்நடைகளை வேட்டையா டும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சிலர் மற்ற இடங்களில் எடுத்த சிறுத்தை படங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு, அது அரச்சலூர், சென்னிமலை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் எடுத்தது போல் பரப்பி வருகின்றனர். அங்கு சிறுத்தை வந்ததற்கா எந்த கால் தடமும் அடையாளமும் இல்லை. இதனால் வனத்துறையினருக்கு சிறுத் தையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னிமலை பகுதியில் சுற் றித்திரிந்த சிறுத்தை பெருந்துறை ஆர்.எஸ்.  பண்ணை நகரில் இருப்பதாக வாட்ஸ் அப் பில் தகவல் பரவியது. இதை அடுத்து வனத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், அங்கு  சிறுத்தை வந்ததற்கான எவ்வித தடயமும் இல்லை. இதுகுறித்து வன அலுவலர் சுரேஷ் கூறு கையில், சிறுத்தையை பிடிக்க 9 கூண்டுகள் அமைத்து உள்ளோம். 21 இடங்களில் கண்கா ணிப்பு கேமராக்கள், 7 சிறப்பு குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர தேடு தல் வேட்டை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் அச்சம் அடையா மல் இருக்கவும் தொடர்ந்து ரோந்து பணி களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், பொது மக்களை பீதி அடைய செய்யும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற னர். எனவே, அதிகாரப்பூர்வமில்லாத தகவல் களை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்க ளில் யாரும் பதிவிட வேண்டாம். சிறுத்தையை பார்க்காமல் பொய்யான தகவல்களை மக்க ளிடம் தெரிவிக்க வேண்டாம். விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம், என்றார்.

பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு 
நாமக்கல், அக்.31- தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள தால், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், தற்காலிக பட்டாசு கடைகள் கணிசமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் செயல்படும் தினசரி பட்டாசு கடைகளில், அதிகாரிகள்  முன் னெரிச்கை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந் நிலையில், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில் செயல்ப டும் தனியார் தினசரி பட்டாசு கடையில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், குமாரபாளையம் வட்டாட்சி யர் சண்முகவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அடிப்படை வசதிகள் கேட்டு ரேசன் கார்டு ஒப்படைப்பு போராட்டம்

திருப்பூர், அக்.31- திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேசன் கார்டு களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி, 57 ஆவது வார்டுக்குட்பட்ட சின்ன பழனிசாமி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 25 ஆண்டு காலமாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் அதிகாரி கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். தரமான தார்ச்சாலை, சாக் கடை கால்வாய், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் இல் லாததன் காரணமாக மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக வும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து  பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள், நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி, ரேசன் கார்டுகளை ஒப்படைப்பதாக கூறி போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ் குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து மனு  அளித்தனர்.

கனமழையால் வாழைகள் சேதம்
ஈரோடு, அக்.31- அம்மாபேட்டை அருகே பெய்த கனமழையால் வாழை  மரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதி களில் திங்களன்று மாலை பலத்த மழை பெய்தது. இதில்  குருவரெட்டியூர், கரடிப்பட்டியூர், தண்ணீர்பந்தல் பாளை யம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டி ருந்த பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை முதலீடு செய்து கதலி ரக  வாழையை பயிரிட்டோம். அடுத்த மாதம் அறுவடைக்கு தயா ராக உள்ள நிலையில், திடீரென மழை பெய்து எங்கள் வேளாண்மையை சேதப்படுத்தி விட்டது. இதனால் ஏக்க ருக்கு ரூ.4 லட்சம் வரை வரும் வருமானம் பறிபோனது. எனவே, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட எங்கள் விவசா யத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி ஊராட்சி செயலாளர் மீது புகார்

தருமபுரி, அக்.31- போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி ஊராட்சி செயலாளர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நல்லம்பள்ளி வட்டாட்சி யர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியி ருப்பதாவது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்தி கேயன். இவர் தருமபுரி மாவட்டம், பங்கு நத் தம் அடுத்த பண்ட அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, 16.5.1998 ஆம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவ ருடைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழை உண்மை தன்மை அறியும் பொருட்டு,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக் குநருக்கு அனுப்பியும், அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது. அதில் கார்த்திகேயன் 10 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுத்து, அதனை திருத்தம் செய்து 47 மதிப்பெண் பெற்றுள்ள தாக பொய்யான சான்றிதழை கொடுத்து  பணியில் சேர்ந்து உள்ளதாக தெரியவந்தது.  அதன் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன டிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தர வின் பெயரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுயானையை போராடி விரட்டிய பொதுமக்கள்

ஈரோடு, அக்.31- தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானையை அப்பகுதி பொது மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்கு கள் வசித்து வருகின்றன. குறிப்பாக, வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானை கள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை  நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந் நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் செவ்வா யன்று ஒற்றை காட்டுயானை புகுந்தது. குடி யிருப்பு பகுதியில் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்த யானை, பின்னர் அப்பகுதியில் உள்ள  விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது விளைப் பொருட்களை சேதப்படுத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த அப்பகுதி பொதுமக் கள் மற்றும் விவசாயிகள் யானையை விரட்ட முயன்றனர். ஆங்காங்கே தீ மூட்டியத்து டன், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட் டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானை  மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து டிராக்டர் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. எனி னும் வனப்பகுதியிலிருந்து எந்த நேரமும் மீண்டும்  ஊருக்குள் யானை வரலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் யானையின் நட வடிக்கையை கண்காணித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணவனை இழந்தவர் அரசு வேலை கேட்டு மனு

தருமபுரி, அக்.31- பட்டாசு கடை வெடி விபத்தில் கணவனை இழந்தவர், அரசு வேலை கேட்டு தருமபுரி ஆட் சியரிடம் மனு அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் கடந்த அக்.7 ஆம் தேதியன்று தனியார் பட் டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் தரும புரி மாவட்டம், அரூர் அருகே டி.அம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த வேடப்பன் (23) என்பவருக்கு கடந்த செப்.17 ஆம் தேதியன்று  தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலை யில், வேடப்பனின் மனைவி சோனியா காந்தி  தருமபுரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங் கேற்று ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நான் பிஏ வரை படித்துள்ளேன். எனக்கும், டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த வேடப்பனுக் கும் கடந்த செப்.17 ஆம் தேதியன்று  திரு மணம் நடைபெற்றுது. எனது கணவர் கர்நா டகா மாநிலம், அத்திப்பள்ளியில் ஏற்பட்ட தனி யார் பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந் தார். இதனால் வாழ்வாதாரம் இழந்து, ஆதர வன்றி தவித்து வருகிறேன். எனவே, அரசு பணிவுடன் எனது மனுவை பரிசீலித்து எனக்கு  அரசு வேலை வழங்க உதவ வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கத்தால் பாதிப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

ஈரோடு, அக்.31- சத்தியமங்கலம் அருகே நடைபெற்று வரும் சாலை விரி வாக்க பணிகளால் வீடுகள் அகற்றப்படும் நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம், பாரதி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது, தங்கள் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்திக் கடவு - அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பட்டது. தற்சமயம் மழைநீரும்  அக்குளத்தில் சேர்ந்துள்ளது. அத்துடன், தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது.   பல நாட்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி யாகி, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.  இத னால் குழந்தைகளை வைத்து கொண்டு தங்க முடிய வில்லை. எனவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், எனக் கேட்டுள்ளனர். சாயக்கழிவு பிரச்சனை தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அளித்த மனுவில், பவானி அருகே காடையம்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து இரவு நேரங்களில் சாயக்கழிவுநீர் சட்ட விரோதமாக சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றப்படுகிறது. இதனால் பொதுமக்க ளுக்கு புற்றுநோய், தோல் தொடர்பான நோய்கள் வருகின் றன. ஆகவே, சாயக்கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்ட றைகளுக்கு சீல் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலை விரிவாக்கத்தால் பாதிப்பு சத்தியமங்கலம், அரசூர் அருகே இண்டியம்பாளையத் தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோபி - சத்திய மங்கலம் சாலையை விரிவுபடுத்தும் பணி தற்போது நடை பெற்று வருகிறது. இதனால் தாங்கள் வசித்த வீடுகள் இடித்து  அகற்றப்படும் நிலை ஏற்பட்டது. நாங்கள் தட்டாம்புதூரில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி குடிசை அமைத்து குடி யேறினோம். அந்த இடத்துக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.