சேலம், அக்.24- சேலம், சஞ்சீவிராயன்பேட்டையில் முன் னறிவிப்பின்றி சாலையோரக் கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை, வியா பாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டையில் காளியம் மன் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலை ஒட்டிய திருச்சி சாலையோரம் 30க்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள் கடை களை அமைத்து வியாபாரம் செய்து வந்த னர். இதற்காக மாநகராட்சி, இந்து சமய அற நிலைத்துறை ஆகியவற்றிற்கு சுங்கக்கட்ட ணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், எவ் வித முன்னறிவிப்பும் செய்யாமல், போலீசா ரின் பாதுகாப்புடன் சாலையோரக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழனன்று அகற்றி, பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் இந்த நடவ டிக்கையால், வட்டிக்கு பணம் வாங்கி, கடை நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தியும், கடைகள் அகற்றப் பட்டது கண்டனத்திற்குரியது, என வியாபாரி கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.