districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு

ஈரோடு, மார்ச் 8- அரசின் பரவலாக்கப்பட்ட நெல்கொள்முதல் திட்டத் தின்படி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் விளைந்துள்ள நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்திட  20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட் டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் ஈரோடு  மண்டலத்தில் கள்ளிப்பட்டி, கரட்டடிப்பாளையம், என்.ஜி. பாளையம், புதுவள்ளியம்பாளையம், புதுக்கரைப்புதூர், காசிபாளையம், கூகலூர், கருங்கரடு, சவுண்டப்பூர், பெருந் தழையூர், மேவானி, நஞ்சை துறையம்பாளையம், கொண் டையம்பாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்று,  நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார்  அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்பட  ஆகிய ஆவணங்களுடன் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். அரசு  நிர்ணயித்துள்ள தரம் மற்றும் 17 விகிதத்திற்குள்  ஈரப்பதம்  உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை கூடுதலாக குவிண்டால் ஒன்றுக்கு கிரேடு ஏ ரூ.2160, நெல்  பொது ரகம் ரூ.2115 ஆகும். என ஈரோடு மாவட்ட ஆட்சியர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

உண்டியல் திருட்டில் சிக்கிய ருசிகரம்

கோவை, மார்ச் 8 - சூலூர் அருகே அடிதடி வழக்கில் விசாரணைக்கு காவல்  நிலையம் சென்ற வாலிபரை சிசிடிவி காட்டிக் கொடுத்ததால் கோயில் உண்டியல் உடைத்த வழக்கில் சிக்கி சிறை சென்ற  ருசிகர சம்பவம் அரங்கேறியது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நாயக்கன் பாளையம் பகுதியில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவிலில் இருந்த  உண்டியல் உடைத்து திருடப்பட்டதாக சூலூர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோவிலில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்திருந்தனர். இந்நிலை யில், சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த ஒரு அடிதடி  வழக்கு ஒன்றில் விசாரணைக்காக வாலிபர் ஒருவர் வந்துள் ளார். அப்போது எதேச்சையாக கோவில் நிர்வாகிகள் சிலர்  காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது கோவில்  உண்டியலை உடைத்த நபரை போலவே இருந்த வாலிபரை பார்த்து சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகிகள், இது குறித்து ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளனர்.  சுதாகரித்துக் கொண்ட போலீசார் அடிதடி வழக்கில் விசாரணைக்கு வந்த  வாலிபரை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர்.  விசாரணையில், அவர் நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் விஷ்ணு(27) என தெரியவந்தது. மேலும், அவர் உண்டியல் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார்,  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். உண்டியல்  உடைத்து திருடியவர், தானே வம்படியாக வந்து காவல்  நிலையம் வந்து சிக்கிக் கொண்ட சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியது.

பருத்தி ஏலம்

தருமபுரி, மார்ச் 8- அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் செவ் வாயன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட் டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவ சாயிகள் பருத்தியை விற்ப னைக்கு கொண்டு வந்தனர். தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியா பாரிகள் வந்திருந்து ஏலத் தில் கலந்து கொண்டனர். 420 விவசாயிகள் 1,600 பருத்தி  மூட்டைகளை கொண்டு வந் திருந்தனர். இதில் ஆர்சிஎச்  ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயி ரத்து 866 வரையும், டிசிஎச் ரகப்பருத்தி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரத்து 600  வரையும் விற்பனை ஆனது.  மொத்தம் ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

தாயை பிரிந்த குட்டியானையை மீட்க நடவடிக்கை

தருமபுரி, மார்ச் 8- மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த  தாயை பிரிந்த குட்டியானையை மீட்க வனத்துறையினர் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் 3  காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. அதில் உடன்  வந்த 2 குட்டி யானைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியது.  இந்நிலையில், இரவு முழுவதும் இறந்த தாய் யானையை சுற்றி குட்டி யானைகள் வலம் வந்தது. இதை பார்த்த பொது மக்கள் வேதனை அடைந்தனர். இதையடுத்து மக்கள் கூட் டத்தை கண்டதும் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் உள்ள  புதரில் தஞ்சமடைந்தது. அவ்வப்போது புதரில் இருந்து வெளியே ஓடி வருவதும்,  பின்பு புதருக்குள் செல்வதும், தாய் இல்லாததால் பிழிறுவது மாக குட்டி யானைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. இந்த  இரு குட்டிகளையும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி காட்டு யானைகள் கூட்டத்துடன் சேர்க்க வேண்டும். அப்படி அந்த  குட்டி யானைகள் சேராவிட்டால், பின்னர் முகாமில் சேர்க்கப் படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதனன்று அந்த குட்டி யானைகளை பிடிக்க வனத் துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:34.63/60அடி 
நீர்வரத்து:794கன அடி
வெளியேற்றம்:1133கன அடி

அமராவதி அணை 
நீர்மட்டம்:53.15/90அடி.
நீர்வரத்து:46கனஅடி
வெளியேற்றம்:151கன அடி

போக்சோ வழக்கில் கைதானவர் திடீர் மரணம்

கோவை, மார்ச் 8- கோவையில், போக்சோ கைதியின் திடீர்  மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கோவை, தடாகம் அருகே உள்ள நஞ்சு ண்டாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி என்ற  தம்பா (67). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு  துடியலூர் அனைத்து மகளிர் போலீசாரால்  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், கோவை மத்திய சிறையில் தண் டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்நிலையில், பழனிசாமி மூச்சு விட  முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனை யடுத்து, அவரை சிறை அதிகாரிகள் கோவை  அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள்  வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனி சாமி உயிரிழந்தார்.  இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பந்தாயசாலை போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் சிவில் இன்ஜினியர்கள் அறிவுறுத்தல்

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் சிவில் இன்ஜினியர்கள் அறிவுறுத்தல் திருப்பூர், மார்ச் 8 – திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் தலைவர்  சௌ.ஸ்டாலின்பாரதி புதனன்று விடுத்துள்ள அறிக் கையில், வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளை தமிழ கத்தில் நடந்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அது  உண்மை இல்லை. எப்போதும் போல் எவ்வித அச்சமும் இல் லாமல் வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு பணியாற்றும் சூழ் நிலை நிலவுகிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அவர் களுக்குத் தேவையான பாதுகாப்புத் தருவதாக கூறியுள் ளனர். எனவே இங்கு பணியாற்றும் வட மாநில கட்டடத் தொழி லாளர்கள் வீண் வதந்திகளை நம்பாமல் தொடர்ந்து பணியாற் றும்படி திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

பாஜக அட்டூழியத்தைக் கண்டித்து எரிசனம்பட்டியில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 8 - திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி குண்டர்களின் வன் முறை வெறியாட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியம் எரிசினம்பட்டியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உடு மலை ஒன்றியக் கமிட்டி உறுப்பினர் சு.தமிழ்த்தென்றல் தலை மை ஏற்றார். திரிபுராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும், கட்சி அலுவல கங்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதை கண் டித்தும், அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ஜெகதீசன், ஏ.ராஜகோபால், கே. முருகவேல், எம்.ரங்கராஜ் ஆகியோர் பேசினர்.  இதில் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கண்டனம் முழங்கினர். நிறைவாக எரிசினம்பட்டி கிளைச் செயலாளர் டி.மணிக் குமார் நன்றி கூறினார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

அமராவதி அணை நீர்மட்டம்:53.15/90அடி.நீர்வரத்து:46கனஅடி
வெளியேற்றம்:151கனஅடி

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:34.63/60அடி நீர்வரத்து:794கன அடி
வெளியேற்றம்:1133கனஅடி

அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்

சேலம், மார்ச் 8- சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நகர்ப்புற மருத்துவ நிலை யங்களில் தற்காலிகமாக மருத்துவர்கள், சுகாதார ஆய்வா ளர் நிலை - 2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த  அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 84 பதவிகள் நிரப்பப் படுகிறது. இதில் மருத்துவர்கள் 28, பல்நோக்கு சுகாதார பணி யாளர்கள் 28, உதவியாளர்கள் 28 பணியிடங்கள் வழங்கப் பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 10 ஆம் தேதி (நாளை) மாலை 5.45 மணிக்குள் வர வேற்கப்படுகின்றன. மருத்துவர்கள் பணிக்கு கல்வித்தகுதி எம்பிபிஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ படிப்பு படித் திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று  இருக்க வேண்டும். உதவியாளர்கள் பதவிக்கு 8 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் படிவங்கள் நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவ லகம், பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம்  மாவட்டம் - 636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவிலிருந்து தருமபுரி வந்த உரம்

தருமபுரி, மார்ச் 8- ஒடிசாவிலிருந்து டன் கணக்கில் டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ்  உரங்கள் தருமபுரி ரயில் வந்தடைந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளுக்கு விநியோகம் செய்ய டிஏபி உரம் 1027 மெட்ரிக்  டன்னும், 331 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில்  நிலையம் வந்தடைந்தது. தருமபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 76 மெட்ரிக் டன் டிஏபி யும், காம்ப்ளக்ஸ் 20 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 70 மெட்ரிக் டன் டிஏபியும், 25 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், திரு வண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்க ளுக்கு 60 மெட்ரிக் டன் டிஏபி உரமும், தருமபுரி மாவட்ட இருப்பு கிடங்கில் 310 டன் டி.ஏ.பி உரமும் காம்ப்ளக்ஸ் உரம் 130 மெட் ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் 511  மெட்ரிக் டன் டிஏபி உரங்களும் 136 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டன. லாரிகளில் மூலம் பிரித்து அனுப்பும் பணியினை தருமபுரி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு தாம்சன் நேரில் ஆய்வு  செய்தார். இந்த ஆய்வின் போது இப்கோ தருமபுரி மாவட்ட  விற்பனை அலுவலர் அப்துல்லா உடனிருந்தார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் யூரியா 2,923 மெட்ரிக் டன்னும், டிஏபி 3,043 மெட்ரிக்  டன்னும், பொட்டாஷ் 811 மெட்ரிக் டன்னும் காம்ப்ளக்ஸ் 4,668  மெட்ரிக் டன்ணும், சூப்பர் பாஸ்பேட் 395 மெட்ரிக் டன் என  மொத்தம் 11840 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன் படுத்தி அரசு மானிய உரங்களை பெற்று தங்களின் விவசாய தேவைக்கு பயன்படுத்த வேண்டுமாய் தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் விற்பனையாளருக்கு கத்திக்குத்து

கோவை, மார்ச் 8- கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் விற் பனையாளரை வழி மறித்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்த வர் நாகமாணிக்கம் (51). இவர் கிணத்துக் கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை  பார்த்து வருகிறார். இவர், செவ்வாயன்று வழக்கம் போல கடையை மூடிவிட்டு, இரவு 12 மணியளவில் தனது இருசக்கர வாகனத் தில், வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். கடையிலி ருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் நாகமாணிக்கத்தை  நிறுத்தி, வழி கேட்டுள்ளனர். நாகமாணிக்கம் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த  கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட் டார். இதனைகேட்ட அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதை யடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரா டிக்கொண்டிருந்த நாகமாணிக்கத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக் குப்பதிவு செய்து, டாஸ்மாக் விற்பனையா ளரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலாளி தற்கொலை

 பள்ளிபாளையம்,  மார்ச் 8- விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியக்காடு பகுதியை சேர்ந்தவர், அருள்வேலு (32). விசைத்தறி தொழி லாளி. இவருடைய மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய காடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற அருள் வேலு செவ்வாயன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.