உதகை, அக்.27- குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத் தில் 77ஆவது காலாட்படை தினம் அனுசரிக் கப்பட்டது. 77ஆவது காலாட்படை தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூண் சின்னத்தில் போர்களில் பங்கேற்று உயர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், லெப்டினன்ட் ஜெனரல் தேவ்ராஜ் அன்பு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று போர் நினைவு சின் னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில், வெலிங்டன் ராணுவ மையம், முப்படைகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் காலாட்படை பிரிவை சேர்ந்த பல அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் மற்றும் பிற நிலை வீரர்கள் கலந்து கொண் டனர்.