திருப்பூர், பிப்.8- என்டிசி, என்ஏசி மூன்றாண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. ஐஐடி-களில் சிபிடி தேர்வு ரத்து செய்ய வேண்டும். கணிதம் மற்றும் வரைபட பாடத்திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைத் ததை திரும்பப்பெற்று, மீண்டும் பழைய நிலையில் தொடர வேண்டும். என்டிசி மற்றும் என்ஏசி என மொத்தம் மூன்றாண்டு பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியா ளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூரில் புதனன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.