districts

img

போதிய விலை கிடைக்காத துவரை- விவசாயிகள் ஆவேசம்

ஈரோடு, பிப்.15- அந்தியூர் ஒழுங்குமுறை கூடத் தில் துவரைக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி அந்தி யூர் – சத்திமங்கலம் சாலையில் அப்பகுதி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய நாட்களில் வேளாண் விளைப் பொருட்கள் ஏல விற் பனை நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் துவரை அறு வடை செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது வாரமாக அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் திங்களன்று விளை பொருட் கள் அடங்கிய ஆயிரத்து 100  மூட்டை துவரைகளை விவசாயி கள் ஏல விற்பனைக்கு கொண்டு  வந்திருந்தனர். இதில் துவரையின் தரத்தை பொறுத்து கிலோ ரூ.48 முதல் ரூ.67 வரை விற்பனையா னது.  இதே துவரை கடந்த வாரம் ரூ.57 முதல் ரூ.67 வரை ஏலம் போனது. இதனால் கடந்த வாரத் தைவிட இந்த வாரம் மிகக் குறைந்த அளவாக கிலோவிற்கு ரூ.10 ஆக விலை குறைந்ததாகக் கூறி விவசாயிகள் அந்தியூர் –  சத்திமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட துணை இயக்குநர் சாவித்திரி, கண் காணிப்பாளர்கள் லட்சுமணன், ஞானசேகர், காவல் துறை அதிகா ரிகள் மற்றும் அப்பகுதி விவசாயி கள் பலர் கலந்து கொண்டனர். இதில், அரசு நிர்ணயித்த விலை யான ரூ.63 வழங்க வேண்டும். பணத்தை உடனடியாக பட்டு வாடா செய்ய வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தினர். அதற்கு  ஒழுங்குமுறை விற்பனை கூட அதி காரிகள் தரப்பில், துவரையின் தரத்திற்கு ஏற்றார் போல் தான்  விலை நிர்ணயம் செய்ய முடியும்,  என்றனர். இதைத்தொடர்ந்து, பல மணி  நேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்த வாரம் திங்கள் கிழமை நடைபெறும் ஏலத்தில் உரிய விலை கிடைக்கப்படும் என வும், அதுவரை விவசாயிகள் இருப்பு வைக்கும் துவரை மூட்டை களுக்கு வாடகை வசூலிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி யளித்தனர்.