districts

img

நீலகிரி: சைனீஸ் காய்கறிகளின் விலை உயர்வு

உதகை, ஜன.13- நீலகிரி மாவட்டத்தில் 10 மடங்கு வரை விலை  உயர்ந்த சைனீஸ் காய்கறி களால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந் துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில்  கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணி, டர்னிப்  போன்ற மலை காய்கறிகளும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. அதே வேளை யில் சைனீஸ் காய்கறிகளான சைனீஸ் கேபேஜ், புரொக்கோலி, ஐஸ்பெர்க், செலரி,  லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனி யன், ஜூக்னி, ரெட் கேபேஜ் போன்றவற்றை  பயிர் செய்து சந்தைப்படுத்தும் பணிகளில் சமீப காலமாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகை, கோத்தகிரி பகுதிக ளில் பல விவசாயிகள் சைனீஸ் காய்கறி களை விளைவிக்கின்றனர். குறிப்பாக கொதுமுடி கிராமத்தில் அதிகளவில் சைனீஸ் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சைனீஸ் காய்கறி விவசாயமும் கடுமையாக பாதிப்படைந் தது. இதனால், சந்தைக்கு வரத்து வீதமும் வெகுவாக குறைந்துள்ளது. இவற்றின் விலையும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. உதகையில் உள்ள மொத்த ஏல மையத்தில் வழக்கமாக ரூ.40  முதல் ரூ.50க்கு விற்பனையாகி வந்த ஜூக்னி தற்போது ரூ.120 ரூபாய்க்கு ஏலம் போகிறது. ரூ.70க்கு விற்பனையாகி வந்த புரூக்கோலி தற்போது ரூ.220க்கும், ரூ.40 முதல் 50க்கு  விற்பனையாகி வந்த ஐஸ் பெர்க் ரூ.230க்கும், ரூ.30 முதல் 40-க்கு விற்பனை யாகி வந்த செலரி ரூ.200 முதல் 220 வரையி லும், ரூ.40-க்கு விற்பனையான லீக்ஸ் ரூ.300க்கும், பார்ஸ்லி ரூ.380-க்கும், லெட் யூஸ் ரூ.200 வரையும் விலை உயர்ந்துள் ளது. சைனீஸ் காய்கறிகளின் விலை உயர்வு குறித்து கொதுமுடி கிராமத்தை சேர்ந்த விவ சாயி ராமன் என்பவர் கூறுகையில், உதகை, கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகள் அதிகம் விளைவிக் கப்படுகின்றன. இந்த வகை காய்கறிகள் நட்சத்திர உணவகங்களில் துரித உணவுகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின் றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகள் கேரளா, கர்நா டகா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகிறது. மழை காரணமாக சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற் றின் விலை தற்போது கடுமையாக உயர்ந் துள்ளதால் அதிக விலை கொடுத்து வாங்க  வெளி மாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டு வதில்லை. குறைந்த அளவிலேயே கொள் முதல் செய்து வருகின்றனர், என்றார்.