districts

img

புத்தகங்களோடு புத்தாண்டு

ஈரோடு, ஜன.2- புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் ஈரோடு நாடக கொட்டகையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர் கள் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் உதயசங்கர் 100 என்ற தலைப்பில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்ட தலைவர் மு.சங்கரன் தலைமை வகித்தார். கதை சொல்லி சரிதாஜோ, சிறார் கதைகளோடு தொடங்கினார். கதைசொல்லி ஈரோடு சர்மிளா, சிறுகதைகளை விவரித்தார். முத்துக்கண்ணன் கட்டுரைகளை விவரித்தார். இரவிச்சந்தி ரன், எழுத்தாளர் வே.சங்கர், இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் ஆகியோர் நூல்களை வெளியிட சிறுவர்கள் பெற்றுக் கொண் டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்களின் மதிப்பீடுகள் அடங்கிய காணொலி காட்சி மற்றும் பாரதி புத்தகாலயத்தின் புத்தக கண்காட்சியும் இடம் பெற்றது. இறுதியாக எழுத்தாளர் உதயசங்கர் ஏற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் கி. கணேசன் நன்றி கூறினார்.