கோவை, ஜன.28- கோவையில் முன்னறிப்பின்றி மூடப்பட்ட அமெரிக்க நிறுவனத் தால் 3 ஆயிரம் ஊழியர்கள் நடுத் தெருவில் நிறுத்தப்பட்ட நிலையில், சிஐடியு, வாலிபர் சங்கத்தினர் தலையீட்டால் தொழிலாளர் நலத் துறையில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இது அவ்வூழி யர்களுக்கு நம்பிக்கையை ஏற்ப டுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த போக் கஸ் எஜுமெட்டிக்ஸ் (Focus Edumatics) என்ற தனியார் நிறுவ னம். தமிழகத்தில் இருந்து அமெ ரிக்க பள்ளிக் குழந்தைகளுக்கு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட ஆன் லைன் வகுப்பு எடுக்கும் பணிகளை செய்து வந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திடிரென அந்நிறு வனம் மூடப்படுவதாக அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழி யர்கள் திங்களன்று கோவை ஆட் சியர் அலுவலகத்தில் குவிந்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழித் துக்கொண்டிருந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறு பல மக்கள் நலக்கோரிக்கைகளுக் காக வந்த சிஐடியு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர், இவ் வூழியர்களின் நிலைமையை கண்டு உணர்ந்தனர். இதனையடுத்து, தனி யார் நிறுவன ஊழியர்களை அழைத் துக்கொண்டு, தொழிலாளர் நலத் துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனையடுத்து, செவ்வாயன்று மீண்டும் தொழிலா ளர் நல அலுவலகத்திற்கு சிஐடியு, வாலிபர் சங்கத்தினர் மற்றும் ஊழி யர்கள் வந்தனர். இதையடுத்து சிஐடியு தொழிற் சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் குழு வினர், அதிகாரிகள், அமெரிக்க நிறு வன அதிகாரிகளுடன் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர். இதில், வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழி யர்களுக்கும் ஜன மாத ஊதியம் மற்றும் பணிகொடையை வழங்கு வதாக தெரிவித்தனர். மேலும், அவர் களது சான்றிதழ்கள், பணி அனுப வச் சான்றிதழ்களை வழங்கவும் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும், திடிரென வேலையை இழந்து நிற்கும் இளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வரும் 31 ஆம் தேதி ஊதியம் வங்கி கணக்கில் வந்தவுடன் இழப் பீடு தொகை மற்றும் அது குறித்தான பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்தனர். மூவாயிரம் ஊழியர்களை திடீ ரென நடுத்தெருவில் தனியார் நிறு வனம் நிறுத்திய நிலையில், சிஐ டியு, வாலிபர் சங்கத்தின் தலையீட் டால், இவ்வூழியர்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்தியுள்ளது. பாதிக் கப்பட்ட தனியார் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட சிஐடியு, வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.