districts

img

கொங்கு பொறியியல் கல்லூரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஈரோடு, ஜுலை 2- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் துறை  (இசிஇ), கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டது. டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந் நிறுவனம் வெப்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கும் உலக ளாவிய முன்னணி நிறுவனமாகும்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லூரி மாணவர்கள் நிறுவனத்தில் பயிற்சி எடுத்தல், ஆசிரியர் பரிமாற்றம் ஆகிய வற்றை ஊக்குவிக்கிறது. மேலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கும், இன்டெர்ன்ஷிப் பெறுவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவி புரிகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை ஹெச்ஆர் கிளிப் பான், ஆபரேசன்ஸ்  ஹெச்ஆர் ஸ்வாதி கோயல், கல்லூரியின் முதல்வர் வீ. பாலுசாமி, ஐஐபிசியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி. சத்யமூர்த்தி, ப்ளேஸ்மென்ட் அன்ட் ட்ரைனிங் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரன், இசிஇ துறைத் தலைவர் என்.கஸ்தூரி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற் றனர். இந்த நிகழ்வை கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ  பாராட்டினார்.