districts

img

திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை, மே 20- கனமழை காரணமாக இராமநாதபுரம் சிக்னல் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத் தால் வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளகினர். கோவையில் பெய்த கன மழை காரணமாக கோவை, திருச்சி சாலையில் இராமநா தபுரம் சிக்னல் அருகே ஏற் பட்ட திடீர் பள்ளங்கள் ஏற்பட் டது. இதனையடுத்து, உடன டியாக அந்த இடத்தில் காவல் துறை தடுப்புகள் வைத்து விபத்து ஏற்படுவதை தடுத்தனர்.  மேலும், மாநகர போக்குவரத்து காவல் துறையினர் துரி தமாக செயல்பட்டு பள்ளத்தில் காங்கிரீட் கலவையினை கொட்டி தற்காலிகமாக சரி செய்தனர். இப்பகுதியில் நாள்  தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லக் கூடிய பிரதான சாலையான கோவை, திருச்சி நெடுஞ் சாலையில் சமீபத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி பணிகள் முடிக்கப்பட்டது. அதன் பின் னர் சரிவர சாலை அமைக்கப்படாததாலேயே இதுபோன்று மழைக்காலங்களில் பெரும் பள்ளம் ஏற்பட்டு விடுகிறது என  பொதுமக்கள் தெரிவித்தனர்.

;