districts

img

கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

நாமக்கல், டிச.23- பள்ளிபாளையம் பகுதி யில் போக்குவரத்து பணி யில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில்  கடந்த மூன்று ஆண்டுக ளுக்கும் மேலாக சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தினந் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு பணிகளுக்கு செல்வோர், பள்ளி,  கல்லூரி செல்லும் வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகி றது. மேலும், நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களை இணைக்கும் பிரதான சாலை பள்ளிபாளை யம் வழியாக செல்வதால், எப்போதும் அதிக ளவு போக்குவரத்து இருக்கும். இந்நிலை யில், ஞாயிறன்று மாலை 6 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒரே ஒரு போக்குவ ரத்து போலீசார் மட்டுமே பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டி ருந்ததால், போக்குவரத்து நெரிசல் சீராக பல மணி நேரம் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலையில் நின்று கொண்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனவே, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வாகனங்கள் நின்று செல்லும் வகையில் முறையான சிக்னல்கள் அமைக்க வேண்டும். பள்ளிபாளையம் காவல் நிலை யத்தில் கூடுதலாக போலீசாரை நியமனம் செய்து, போக்குவரத்து போலீசாரை பணி யில் ஈடுபடுத்த வேண்டும், என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.