districts

img

மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்

சேலம், செப்.9- ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாண விகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக் கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி  பயின்று வருகின்றனர். இந்நிலை யில் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிக ளுக்கு வெள்ளியன்று அரசு சுகா தாரத்துறை சார்பில் குடற்புண் மாத் திரைகள் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவிகள் பள்ளியிலே திடீரென வாந்தி, மயக்கம் ஏற் பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவி கள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் 108  ஆம்புலன்ஸ் மூலம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மாண விகளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாணவிகள் மயக்கம் அடைந்ததையறிந்த பெற் றோர்கள் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், மருத்துவம னையிலும் குவிந்ததால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர், வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளுக்கு சிகிச் சையை தீவிரப்படுத்தி வருகின்ற னர். இதுகுறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

;