உடுமலை, ஜூன் 10 - உடுமலை இலக்கியக் களத்தின் வைகாசி திங்கள் இலக் கிய நிகழ்வு உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்ட பத்தில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு மடத்துக்குளம் தமுஎகச தலைவரும், வானவில் மின் இதழின் ஆசிரியருமான பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். இக்கூட்டத்திற்கு வந்திருந்தோரை முனி யப்பன் வரவேற்றார். படித்ததில் பிடித்தது நிகழ்வில் எழுத்தா ளர் தெய்வானை, ஆசிரியர் சிவஞானம், அரசு கல்லூரி ஆய்வு மாணவர் பவித்ரா ஆகியோர் தாங்கள் படித்ததில் பிடித்தவை களை எடுத்துக் கூறினர். உடுமலை அரசு கலைக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் மு.ரஞ்சிதா, கொங்கு மண்டல எழுத்தாளரும், பொறியாளருமான அருள்மொழியின் “டைரி” என்னும் சிறுகதை தொகுப்பு நூலை மதிப்பாய்வு செய்து உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து எழுத்தாளரும், செம்மலர் இதழின் ஆசிரியர் குழுவினரான எஸ். ஏ.பெருமாள் மொழி பெயர்த்த “தேசம் என்பது மண் அல்ல” என்ற கவிதைத் தொகுப்பு நூலை உடுமலை இலக்கிய களத் தலைவர் செல்லத்துரை மதிப் பாய்வு செய்து உரையாற்றினார். தொடர்ந்து பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் அறிவியல் இயக்க முன்னாள் தலைவருமான பேராசிரியர் மோகனாவின் “ஓர் இரும்பு பெண்மணியின் கதை”, “பெண் விடுதலைப் போராளிகள்” ஆகிய இரண்டு புத்தகங்களை அறி முகம் செய்து கவிஞர் இளையவன் சிவா பேசினார். புத்தகங் களை மாதர் சங்கத் தலைவர் சசிகலா வெளியிட்டார். தொடர்ந்து கலந்துரையாடலும், கருத்துகளும் பரிமாறப்பட் டன. கலந்துரையாடலில் முத்துக்குமாரசாமி கல்லூரி மாணவர் பவித்ரா, டெல்லி தமிழ் மன்ற உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் செயல்பட்ட ஷாஜகான், எழுத்தா ளர் தெய்வானை வெ.ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் 15க்கும் மேற் பட்ட கல்லூரி மாணவர்களுடன் 40க்கும் அதிகமான இலக் கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தலைவர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.