கோவை, ஏப்.14- இந்தியா கூட்டணிக்கு வாக்க ளிக்கும் பட்சத்தில் மகத்தான பல வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட் டிற்கு கிடைக்கும். குறிப்பாக கோவைக்கு கிடைக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். இந்தியா கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பீளமேடு பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச் சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தி யில் பேசிய அமைச்சர், இது தேர்தல் அல்ல, இது இந்த இனத்திற்கான போர். இந்த தேர்தலின் மூலம் தமிழ் நாட்டின் தனித்துவமும், சகோதரத் துவம், வளர்ச்சியும் அடுத்த கட்டத் திற்கு நகர வேண்டும். அதற்காக ஒன்றியத்தில் நமக்கான ஒரு அரசு அமைய வேண்டும். இந்தியா வின் மத நல்லிணக்கம், சகோத ரத்துவம் செழித்தோங்க வேண் ்டும். கடந்த பத்து ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சி செய்த பாஜக, எப்படி மக்களை சந்தித்து வாக்குகள் கேட்கப் போகிறார் கள். ஆட்சிக்கு வரும்போது நாற் பது ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக் கும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, தற்போது 100 ரூபாய் பெட் ரோல் விற்பனையாகிறது. இதுகு றித்து கேட்டால், அது அப்படித் தான் நடக்கும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொடுக் கக்கூடிய ஜிஎஸ்டி வரி ஒரு ரூபாய் கொடுத்தால் திருப்பி 29 பைசா தான் தருகிறார்கள். இருப்பி னும், நாம் வளர்ந்த மாநிலம் என்ப தனால் அதை பொறுத்துக் கொண் டாலும், மீதமுள்ள தொகையில் வடநாட்டில் தேவையில்லாத சிலை கள் கட்டுவதும், ரூ. 1200 கோடிக்கு பாலம் கட்டி அது ஆற்றில் விழச் செய்வதுமாய் என பல ஊழல்கள் செய்வது பாஜக ஆட்சிக்கு கைவந் தகலையாகும். தேர்தலை ஒட்டி அடிக்கடி தமிழ்நாடு வரும் பிரதமர், தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அதற்குண்டான செங் கலை கூட நமது இளைஞரணி செய லாளரிடம் தான் உள்ளது. இப்படி அடிக்கடி தமிழகம் வருவதும், ரோடு ஷோ நடத்துவது அனைத்து மக்களை முட்டாளாக்க நினைப் பதாகும். அதேபோல், அதிமுக கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் இல்லா மல், பாரதிய ஜனதா கட்சி கூட்ட ணிக்கும் இல்லாமல் தனித்து நிற்கி றது. அவர்கள் பெரும் ஓட்டுகள் அனைத்தும் வீணான வாக்குகள். அவர்களும் மக்களை முட்டா ளாக்க நினைக்கிறார்கள். இந்தியா கூட்டணிக்கு வாக்க ளிக்கும் பட்சத்தில் மகத்தான பல வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட் டிற்கு கிடைக்கும். குறிப்பாக கோவைக்கு விமான நிலையம் விரி வாக்கம், புதிய கிரிக்கெட் மைதா னம், தொழில் வளர்ச்சி போன்றவை கட்டாயம் கிடைக்கும், என்றார். நாட்டின் வளர்ச்சிக்கு எது செய்ய வேண்டும், வேண்டாம் என தெரியாமல், பொய் பிரச்சாரத்தை பரப்பி வரும் பாஜகவை நம்பாமல், மக்களை வளர்ச்சியான பாதைக்கு மாற்றும் இந்தியா கூட்டணிக்கு தங்கள் பெருவாரியான வாக்கு களை செலுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார். முன்னதாக, அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளையொட்டி, புலி யகுளம் பகுதியில் உள்ள அம்பேத் கரின் திருவுருவ படத்திற்கு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இதில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தாயகம் கவி எம்எல்ஏ, கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர்.மகேந்திரன், பகுதிக் கழகச் செயலா ளர் பசுபதி, அணிகளின் துணை அமைப்பாளர்கள் மனோஜ் முத்துச் சாமி, மாமன்ற உறுப்பினர் முனியம் மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.