உடுமலை, ஜூலை 16- சைனிக் இராணுவ பயிற்சிப் பள்ளி யின் 60ஆம் ஆண்டு வைர விழா நடை பெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதி திராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருத்தினராக கலந்து கொண் டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே அமராவதி நக ரில் அமைந்துள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இங்கு மாணவர் கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மாணவிகளும் படிக்கும் வண்ணம் சேர்க்கை நடைபெற்றது. இப்பள்ளியில் கல்வி மற்றும் விளை யாட்டுக்கு அடுத்தபடியாக ராணுவ அனுகுவிப்பு பயிற்சிக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு படித்த பல மாணவர்கள் இந்திய ராணு வம், விமானப்படை மற்றும் கப்பல் படைகளில் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர் 1962 தொடங் கப்பட்ட பள்ளி தற்போது 2022 இல் 60 ஆண்டுகளைக் கடந்து வைர விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வைர விழா நிகழ்ச் சியில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள இருந்தார். அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு மருத்துவம னையில் இருப்பதால் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இதைதொ டர்ந்து இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பள்ளி முதல்வர் கேப் டன் நிர்மல் ரகு, லெப்டினல் கர்னல் மோகன், வைஸ் அட்மினல் அசோக் குமார், இந்திய பாதுகாப்பு படை அதி காரிகள் ஆனந்த் ஐஏஎஸ், ஜெய சீலன், முத்தமிழ்செல்வன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாண வர்கள், தற்பொழுது பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதையடுத்து 37 அலுவ லர்கள் குடியிருப்பினை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், வைர விழா தபால் கவரை வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் முதலில் தமிழக முதல் வரின் வாழ்த்து செய்தியை வாசித்தார். அதில் கடந்த 1969ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர் கள் இப்பள்ளி விழாவில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவாக மாண வர்களை பிரித்து அந்த பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் சுழல் கோப்பையை வழங்கினார். இன்று வரை ஆண்டு தோறும் அந்த கோப்பை கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின் இப்பள்ளிக்கு தான் வர வேண்டும் என முதல்வர் ஆர்வமாக இருந்தார் . ஆனால், கொரோனா காரணமாக அவ ரால் வர முடியவில்லை கண்டிப்பாக இப்பள்ளிக்கு ஒருமுறை வருவேன் என உறுதி அளித்துள்ளார். மருத்துவம னையில் இருந்தாலும் ஒவ்வொரு துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் பேசி கண்காணித்து வருவதாக தெரி வித்தார் இப்பள்ளிக்கு கலைஞர் அவர் கள் வந்து சென்ற பின் 2010ஆம் ஆண்டு துணை முதல்வராக இருந்த போது நானும் இப்பள்ளிக்கு வந்து விழாவில் கலந்து கொண்டதை முதல்வர் கூறிய தாக தெரிவித்தார் தான் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனது சார்பில் இந்த பள்ளிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுமாறு தெரிவித் தார்.
மேலும், இப்பள்ளி முதல்வர் இப் பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக் கைகளை வைத்துள்ளார். அதனை ஏற்று ரூபாய் 7 கோடி நிதி ஒதுக்கி அவை களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளதாகவும் நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள இயங்கி வருகிறது அதில் தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளிக்கு தான் அதிக நிதி தமிழக அர சால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்ததாக கூறி னார் இப்பள்ளி தலைவர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான பள்ளி எனது உடல்நிலை சரியான பிறகு இப்பள்ளிக்கு கண்டிப்பாக நான் வரு வேன் என தெரிவித்ததாக தெரிவித் தார். மேலும், அமைச்சர் பேசுகையில் மற்ற மாநிலத்தில் உள்ள பள்ளிகளை விட இந்த பள்ளி சிறந்து செயல்பட செய்ய வேண்டும் என்பதில் அக்கறை யாக இருப்பதாக முதல்வர் தெரிவித்த தாகவும் மாணவர்கள் மற்றவரை விழ்த்துவதை விட அனைத்து தரப்பு மக்களின் மனதை வெள்ளுவகையில் கல்வியை தர அனைத்து கல்வியை மாணவர்களுக்கு நாம் கற்றுத்தர வேண் டும், நாட்டில் மொத்தமாக 33 சைனிக்க பள்ளிகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள இந்த பள்ளிதான் முன்னினை யில் இருப்பாதகவும் இப்பள்ளியில் மாணவர்களின் மனவலிமை, உடல் மற்றும் தன்னம்பிக்கையை கொண்ட வர்களாக உள்ளார்கள். சமூக மாற் றத்தை கொண்டு வர கல்வியால் தான் முடியும் என்பதால் தங்களின் கட்சி நிர்வாகிகளிடம் மாணவர்களுக்கு உத வும் வகையில் உதவிகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என் றார். பின்னர், அமைச்சர் அமராவதி அணைக்குச் சென்று அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படு வதை பார்வையிட்டார்.