திருப்பூர், மார்ச் 21- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, திருப்பூர் வீரபாண்டி ஆவின் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர் சங்க மாநில குழு உறுப்பினர் எஸ்.கே. கொளந்தசாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி சிறப் புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர். குமார், துணை செயலாளர் எஸ்.வெங்க டாசலம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.பரமசிவம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில், பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி பசும்பாலுக்கு ரூ. 42-ம், எருமைப் பாலுக்கு ரூ. 51-ம் என கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். பால் கொள்முதலை தற்போது நாள்தோறும் 32 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படு கிறது. இதனை ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். ஆவினுக்கு ரூ. 3 விலை குறிப்பி னால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய ரூ. 270 கோடியை அரசு மானியமாக வழங்க வேண் டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை லியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதைய டுத்து திருப்பூர் ஆவின் பொது மேலாளரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட் டது.