ஈரோடு, ஜூன் 14- நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர் என்கிற உறவைப் போல மருத்துவத்துறை மாறியுள்ள தாக இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஆர்.வி.அசோகன் வேதனை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே டெக்ஸ்வேலி அருகில் இமயம் புற்று நோயாளிகள் காப்பகம் செயல் பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்காப்பகம் தொ டர்ந்து சேவை செய்து வருகிறது. இது வரை 1200க்கும் மேற்பட்ட நோயாளி கள் இறுதி வாழ்க்கையை இங்கு கழித் துள்ளனர்.
இந்நிலையில், அக்காப்ப கத்தின் 18 ஆம் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில், இந்திய மருத் துவ சங்கத் தலைவர் ஆர்வி.அசோகன் பங்கேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அசோகன், இந்திய மருத்துவ சங்கம் மூலம் கடந்த 40, 50 ஆண்டுக ளாக ரத்த தானம் தானாக முன்வந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ரத்த வங்கிகளை உரு வாக்கினோம். அகில இந்திய அளவில் எத்தனை ரத்த வங்கிகள் உள்ளது என்ற கணக்கு எங்களிடம் இல்லை.
கேரளா வில் 7 ரத்த வங்கிகள் உள்ளன. கேரளா வின் தேவையில் 20 விழுக்காட்டை அது பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 4 ரத்த வங்கிகள் உள்ளன. இந்திய மருத்துவ சங்கம் 1550 கிளைகளைக் கொண்டது. சுமார் 600 கிளைகள் விழிப்புணர்வு மையங்களாகச் செயல்படும் கட்டடங் களைக் கொண்டது. அதுபோல, கிளை அளவில் ஒவ்வொரு இடத்திலும் என்ன தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து செயல்பட முடியும் என்றார். மருத்துவம் வணிகமயமாவது குறித்த கேள்விக்கு, 1985 இல் இரண்டு நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தது.
அன்று சென்னை, கோவை மருத்து வக்கல்லூரிகள் தான் சமூகத்தில் பெரிய மருத்துவமனைகளாக இருந்தன. இன்று இல்லை. அதை விட்டிருக்கக் கூடாது. கார்ப்பரேட் மருத்துவமனை களை விட்டிருக்கக் கூடாது. லாபத்திற் காக பங்குதாரர்களைக் கொண்டு நடத் தப்படுவது அப்படித்தான் இருக்கும். அதை கொள்கை அளவில் தடுத்திருக்க வேண்டும். அதுபோன்ற மருத்துவம னைகள் சென்னையில்தான் முதலில் வந்தது. அது நாடு பூராவும் இன்று பரவியிருக்கிறது. ஆக இதை மருத்து வமனையாக நடத்துவதா, வியாபா ரமாகப் பார்ப்பதா என அரசிற்கும் புரியவில்லை. மற்றொன்று 1993 இல் நோயாளிகளை நுகர்வோர் என உச்சநீதிமன்றம் சொன்னது. அது கடைக்காரர் - வாடிக்கையாளர் உற வைப் போல மாற்றி விட்டது.
இன்று வரை அது மீளவில்லை. இப்போது அதை திரும்பவும் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு தான் வன்முறை நிகழ்கிறது. அதற்கு முன்பு இல்லை. அதனை சட்டம் போட்டு மாற்ற முடியாது. ஆழமான பிரச்சனைகள் இருக்கிறது, என்றார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் அபுல்ஹசன் பேசுகையில், மருத்துவத்துறையில் நடைபெறும் இந்த வன்முறையைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டம் வகுத்துள்ளோம். மக்களைச் சென்ற டைவதற்கு, அவர்களின் புரிதல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு கிளையிலும் மருத்துவர்கள் - குடிமக்கள், அப்பகு தியில் செயல்படும் தொண்டு நிறுவ னங்களை இணைத்து செயல்படு வோம். சட்டம் போட்டு மட்டும் தடுக்க முடியாது. காவல் துறையினராலும் முடியாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை யாக மாறி வருகிறது. எனவே, மக்கள் - மருத்துவர்கள் இடையே பரஸ்பர புரிதலை உருவாக்கும் வேலையை செய்யலாம் என தமிழ்நாடு மருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது. ஈரோட் டைப் போல வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதியில் புற்று நோய் இல்லங்கள் திறக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத் துவ சங்க உதவித் தலைவர் எம்.சந்திர சேகர், செயலாளர் கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் கௌரி சங்கர், இமயம் காப்பக உதவித் தலைவர் கண்ணம் மாள் துரைசாமி, செயலாளர் சுகுமார், நிதி செயலாளர் என்.ராஜா காப்பாளர் வேலவன், அரவிந்த குமார், மேலாளர் சக்திவேல், முருகன், பூங்கொடி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.