உதகை, ஜூன் 8- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கிய மெக் ஐவர் 147 ஆவது நினைவு தினம் வியாழனன்று அனு சரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவை 1848 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மெக் ஐவர் என்ற கட்டட கலை வல்லுநர் உருவாக்கினார். சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின்னர் 1867ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக் கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு நாடு களை சேர்ந்த 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளன. இந்த பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 1876 ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி யன்று மரணமடைந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழனன்று அவரது 147ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது. இதனையடுத்து ஊட்டி ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்ல றைக்கு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சிபிலா மேரி, ஸ்டீபன் சர்ச் சேர்மன் அருள் திலகம், தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலசங்கர், தோட்டக்கலை அலு வலர் கவின்யா மற்றும் பூங்கா ஊழியர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினர்.