சேலம், மே 17- ஏற்காட்டில் சிஐடியு சார்பில் மே தின பேரணி எழுச்சி யுடன் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் மே தின பேரணி, புதனன்று ஏற்காடு பேருந்து நிலையம் முதல் ஒண்டிக்கடை ரவுண்டானா வரை நடைபெற்றது. சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகி கண்ணாடி ராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில், சிஐ டியு சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், சிஐடியு ஏற்காடு நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் மே தின உரை யாற்றினர். முன்னதாக மே தின பேரணியில் 200க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.