districts

img

ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் சங்கம் ஆவேசம்

சேலம், ஜன.9- மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொ கையை நிறுத்திய ஒன்றிய அரசை கண் டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த மௌலானா ஆசாத் தேசிய கல்வி உத வித்தொகையை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மாணவர்களின் உயர்கல்விக்கு ஒன்றிய மதவாத அரசு முட்டுக்கட்டையிட் டுள்ளது. இத்தகைய மாணவர் விரோத செய லில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து இந் திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்  ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட தலை வர் அருண்குமார் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது போராட்டத்தை விளக்கி உரையாற்றி னார். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டார்வின், பிரேம்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்யா, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கோகுல்ராஜ், கமல் நாத் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.