districts

img

திருப்பூரில் மாதர்கள் போதை எதிர்ப்பு நடைபயணப் பிரச்சாரம்

திருப்பூர், செப்.15- அதிகரித்து வரும் போதைப் பழக் கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முதல் கலைஞர் பேருந்து நிலையம் வரை நடைபயணப் பிரச்சார இயக்கம்  நடத்தினர். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து  வரும் போதை பழக்கத்தைக் கட்டுப டுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை  படிப்படியாக குறைக்க வேண்டும். போதை இல்லா சமூகத்தை உருவாக்க  வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக் கும் பாலியல் வன்கொடுமைகள், உழைப்பு சுரண்டல் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 26ஆம் தேதி மேற்கு  மண்டல போதை எதிர்ப்பு மாநாடு திருப் பூரில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி யன்று திருப்பூர் புதிய பேருந்து நிலை யம் முன்பு போதை எதிர்ப்பு நடைப யணப் பிரச்சார இயக்கத்தை மாதர் சங் கத்தினர் தொடங்கினர். மாதர் சங்க  திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.பவித் ராதேவி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தை முன்னாள்  மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி துவக்கி வைத்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பானுமதி, மாவட்டச் செயலாளர் கு. சரஸ்வதி, மாவட்டப் பொருளாளர் ஆர். கவிதா மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள்  உள்பட பலர் பங்கேற்று பி.என்.ரோடு, புஷ்பா தியேட்டர் சந்திப்பு, குமரன்  சாலை வழியாக போதை எதிர்ப்பு முழுக் கம் எழுப்பியபடி பிரச்சாரம் செய்து  நடைபயணம் மேற்கொண்டனர். முன்னதாக இப்பிரச்சார இயக்கத் திற்கு, வாலிபர் சங்க மாவட்டக்குழு சார்பில் புஷ்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம் முன்பு வரவேற்பு அளிக்கப்பட் டது. வளர்மதி பேருந்து நிறுத்தம் அரு கில் சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது.  கலைஞர் பேருந்து நிலையம் முன் பாக நிறைவடைந்த இந்த பிரச்சார இயக் கத்தில் மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா பங் கேற்று நிறைவுரை ஆற்றினார்.