கோவை, டிச.18- விலைவாசி உயர்வை எதிர்த்து மாதர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். அனைத்ந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோவை மாவட்டக் குழு சார்பில் எஸ்.எஸ் குளம் ஒன்றியத்திற்குட் பட்ட விளாங்குறிச்சி கிளையில் பாப்பா உமாநாத் அவர்க ளின் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விலைவாசி உயர்வை எதிர்த்து நூதனமுறையில் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். இதில், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சுமதி, செயலாளர் உஷா, கிளைச் செயலாளர் கல்யாணி, கிளைத் தலைவர் நித்யா உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.