districts

img

தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

நாமக்கல், டிச. 10- தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அச்சத்தில் உள்ள மக்களுக்கு நம்பிக்கை ஏற் படுத்த கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் என வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  எலச்சிபாளையம் காவல் நிலையத்தில், 1918 ஆம் ஆண்டு  முதல்  14 காவலர்களே உள்ளனர். தற்போது வரை காவ லர்கள் கூடுதல் ஆக்காமல் 14 பேர் மட்டும் இருப்பதால் பொது மக்களின் குறைகளை தீர்ப்பதில் பின்னடைவு ஏற்படு கிறது. மேலும் இரவு நேரங்களில் மளிகை கடை  மற்றும்  பொதுமக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று  நாளுக்கு ஒரு முறை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரு கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும்  அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். காவலர்களை கூடுத லாக்கி இரவு நேர ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும்.  தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்ன தாகவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கடிதம் எலச்சிபாளையம் காவல் நிலை யத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்க டாசலம் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடை பெறும் நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட் டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத் திற்கு கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சு.  சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேவராஜ், மாவட்ட  குழு உறுப்பினர் பழனியம்மாள்,  பி.மாரிமுத்து பி.கிட்டு சாமி ஆர்.ரமேஷ், ஏ.ரஹ்மத், ஈஸ்வரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது  செய்தனர்.