நாமக்கல், ஜன.2- அனைத்து பகுதிகளிலும் அடிப் படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம், திருச்செங்கோடு, எலச்சி பாளையம், நாமகிரிபேட்டை, ராசிபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் 70க்கும் மேற் பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்செங்கோடு, எலச்சிபாளை யம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில், எலச்சிபாளையம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சமு தாய நலக்கூடம் பழுதடைந்தது இருப் பதை இடித்துவிட்டு புதிதாக சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும், குமர மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பொது சுகாதார கழிப்பிட கட்டி டத்தை சுகாதாரமாக வைத்திட வேண் டும். செம்பாம்பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு நிலம் பிரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எலச்சிபாளையம் ஒன்றி யம் முழுவதும், சின்னஎலச்சிபாளை யம், எலச்சிபாளையம், சந்தைபேட்டை, கரியாம்பாளையம், உஞ்சனை குமர மங்கலம், நல்லிபாளையம், செம்பாம் பாளையம், பெரியமணலி, வையப்ப மலை, மணலி பிரிவுரோடு, ஆர்ஐ அலு வலகம் உட்பட 13 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடா சலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ. தேவராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். எருமப்பட்டி ஒன்றியத்தில், பேருந்து நிறுத்தம், முட்டாஞ்செட்டி, செல்லி பாளையம் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு நவீன மருந்துகள் வழங்கி, போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத் தில், எருமப்பட்டி செயலாளர் எஸ்.கே. சிவச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
திருச்செங்கோடு ஒன்றியம் சார்பில் ஆண்டிபாளையம், பொம்மக்கல்பா ளையம், ஆனங்கூர் அண்ணா நகர், தேவனாங்குறிச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், ஒன்றிய செயலாளர் மனோ கரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இதேபோன்று பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூ ராட்சி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் மக்கள் கோரிக்கையை முன் வைத்து ஏ.பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, ஒன்றிய செயலாளர் கே. சின்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மெட்டாலாவில் எஸ்.பாலன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ரெங்கசாமி, வெள்ளகல்பட்டியில் வி. சபாபதி தலைமையிலும், தொப்பப் பட்டியில் இ.குப்பண்ணன் தலைமையி லும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் பங் கேற்றனர்.