கோவை ஜூலை 25- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பல்வேறு பகுதிகளில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் மின்சார தனியார் மயமாக்களுக்கு தமிழக அரசு அடி பணியக்கூடாது. ஏழை, எளிய மக்கள் மீது மீண்டும் சுமையை ஏற்றக்கூடாது. சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி, மாதந்தோறும் மின் அளவு கணக்கிட்டு முறையை நடை முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட் டிற்கு தேவையான மின்சாரத்தை மாநில அரசே உற்பத்தி செய்யும் வகையில், மின் உற்பத்தி திட்டங்களை செயல்ப டுத்த வேண்டும். அதானி நிறுவனத் துக்கு வழங்கும் கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று மாநிலம் தழுவிய ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
அதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கோவை மாவட்டத்தில், கிழக்கு, மேற்கு, பேரூர், தெற்கு, சிங்கை, பீள மேடு, வடக்கு, சூலூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம், மதுக் கரை, அன்னூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், காரமடை, பொள் ளாச்சி உள்ளிட்ட 17 மையங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
பீளமேடு இடைக்குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இடைக் குழுச் செயலாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை மைதானம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மேட்டுப்பா ளையம் தாலுகாச் செயலாளர் கனக ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம் கண்டன உரையாற்றினார். மாவட் டக்குழு முன்னாள் உறுப்பினர் சி.பெரு மாள், மாதர் சங்கம் மாநிலக் குழு உறுப் பினர் ராஜலட்சுமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், நகர கிளைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
மதுக்கரை ஒன்றியக் குழுவின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுக்கரை ஒன்றியக் குழு உறுப் பினர் எம்.மணியன் தலைமை தாங்கி னார். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.பி இளங்கோவன், டி. பாலன் நினைவு சங்கச் செயலாளர் மாரிமுத்து மற்றும் மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கிளைச் செயலாளர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
அன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகாச் செயலாளர் எஸ்.மணி கண்டன் தலைமை வகித்தார். இடைக் குழு உறுப்பினர்கள் சரவணன், மகேந் திரன், அகமது கபீர், சுகுமார், அர்ஜுன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காந்தி பார்க் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு நகர குழுச் செயலாளர் பி.சி.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தங்க நகை தொழிலாளர் சங்கச் செய லாளர் பி.சந்திரன், நகரக்குழு உறுப்பி னர்கள் ஈஸ்வரன் எம்.கே.முத்துக்கு மார், மருதன், சபரிகிரி தாசன் உள்ளிட் டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். முடிவில், நகரக்குழு உறுப்பினர் என்.பரமசிவம் நன்றி கூறி னார்.
பொள்ளாச்சி, திருவள்ளூர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் வி.பாலகுரு சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச் சாமி, தாலுகாச் செயலாளர் எம்.அன் பரசன் தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மகாலிங்கம், ஏ.துரைசாமி, அங்கமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் நகர கிளைச் செய லாளர் ஸ்டாலின் பழனிசாமி நன்றி கூறி னார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சூலூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சூலூர் தாலுகாச் செயலாளர் ஏ. சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்டா லின் குமார் உள்ளிட்ட திரளான நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுப் பிரமணியம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி, சிஐடியு மாவட் டப் பொருளாளர் வேலுசாமி, நகர குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், பரமசி வம், அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், சத்தி பேரூந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் பி. வாசுதேவன் தலைமை வகித்தார். கட்சி யின் தாலுக்காச் செயலாளர் கே.எம்.விஜயகுமார், மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணிகாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி ஆகியோர் நோக்கங்களை விளக்கி உரையாற்றி னர். தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் சுரேஷ், டி.பாப்பாத்தி மற்றும் பி. கணேஷ், எஸ்.ஏ.ராம்தாஸ், கே.பாண்டி யன், தேவராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பி னர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பரமசிவம், தாலுகாச் செயலாளர் பி. முத்துபழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பவானி வட்டம், ஆப்பக்கூடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் கே.விஜயலட் சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜெகநா தன், தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக் கம், தாலுகா கமிட்டி உறுப்பினர் கே. ஆர்.சண்முகம், எம்.ஆர்.பெரியசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல பவானிசாகரில் ஒன்றிய செயலா ளர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
உதகை
நீலகிரி மாவட்டம், உதகை மின்வாரி யம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உதகை தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சங்கரலிங்கம் மற்றும் பிங்கர் போஸ்ட் கிளைத் தலைவர் கே.ராஜேந்தி ரன் ஆகியோர் கண்டன உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. வினோத், தாலுகா உறுப்பினர்கள் ராஜ ரத்தினம், புட்டுசாமி உள்ளிட்ட திராளா னோர் கலந்து கொண்டனர்.