districts

புலையர் இன மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கிடுக

திருப்பூர், ஜூன் 25- உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி மலை பகுதியில் வசிப்பவர்களுக்கு பழங்குடி யின சான்று வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன் முதலமைச்சர் தனி  பிரிவுக்கு மனு அளித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று முதலைமைச்சர் தனி பிரிவுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம் திருமூர்த்தி மலை, தளிஞ்சி  பகுதியில் உள்ள ஒன்பது செட்டில்மெண்ட்க ளில் தளிஞ்சி, கோடந்தூர், குறுமலை, ஈசல் திட்டு, குளிப்பட்டி, திருமூர்த்தி நகர், மாவ டப்பு, காட்டுப்பட்டி, புளியம்பட்டி) இந்து  மலைப் புலையர் மக்கள் வசித்து வருகின்ற னர். இந்து புலையர் வகுப்பானது தற்போது  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள் ளது. ஆனால் இவர்கள் மலைப்பகுதியில் வசித்து வரும் மலைப் புலையர் என்ற பழங் குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் என்றும், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்  கோரி கடந்த 2017 முதல் தொடர்ச்சியாக 755 குடும்பங்களை சார்ந்தவர்கள் போராடி வரு கின்றனர். கோட்ட வனக்குழு, மாவட்ட வனக் குழுவில் இது குறித்து முனைவர் மகேஸ் வரன் ஆய்வாளர் இப்பகுதியில் உள்ள வர்கள் பழங்குடியினர் தான் என்று பரிந்துரை வழங்கினார்கள். நீண்ட ஆய்வுக்கு பின்  பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இன்று வரை பழங்குடியினர் என்ற சான்றிதழ் கிடைக் கப் பெறாமல் 200 க்கும் மேற்பட்ட குழந்தை கள் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் பாதிக் கப்பட்டுள்ளனர். The Constitution scheduled Tribes modification order 195e, Part VIL, Madras (Taminadu) ன் சட்டப்படி புலையன் என்ற  சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 18ல் சேர்த்தும், தவிர கன்னியா குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்தில் உள்ள மலைப்புலையர் என்ற சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 2 ல்  சேர்த்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட் டுள்ளது. 1977 மத்திய அரசின் ஆணைப்படி Vide Appendix 14 of Special Representation orders Brochure issued in 1975 by the Govt of India, Department of Personal and Administrative reforms, Cabinet Secretriat, New Delh as amended under letter No:36012/6/76 EST(SCT) dated 20.10.1977 வழிகாட்டுதல்படி கொடைக் கானல் வட்டாட்சியர் ந.க.எண்: 1038/7, நாள்  27.11.1971 ன் படி பெரியூர் கிராமத்தை சார்ந்த  நபருக்கு இந்து புலையன் என்ற பழங்குடி யினர் சாதிச் சான்று வழங்கியுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்த இந்து புலையர் இன மக்களுக்கு 197, 1984, 1980ஆம் ஆண்டுகளில் பழங்குடியினர் சான்று வழங் கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதிகளில் ஒரு பகுதியினருக்கு பழங்குடியின சான்று வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அந்த வனங்களில் வாழும் மூன்று தலை முறைக்கு முந்திய பாரம்பரியத்தை கொண் டவர்கள். இவர்கள் மற்ற பழங்குடியின ரைப் போன்றே காடுகளில் தேன் சேகரித்தல், புல் வளர்த்தல் மற்றும் இதர வேளாண்மை  சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். இவர்களின் வாழிடம் அருகில் அமைந்துள்ள கேரள எல்லைக்குள் இந்து மலைப் புலை யினர் வகுப்பினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கான பழங்குடி யினர் சான்று கேரளா அரசால் தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே உடுமலைப்பேட்டை வட்டத்தில்  உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் வசித்து  வரும் இந்து புலையர் இன சமூகத்தினருக்கு இந்து மலைப்புலையர் என பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து உடனடியாக சாதி  சான்று வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள் ளது. முன்னதாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் த.கிருஸ்துதாஸ் வழியாக முதல்வரின்  தனிப்பிரிவிற்கு இம்மனு அனுப்பபப்பட்டது.